Wednesday, December 31, 2008

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


அன்பு நண்பர்கள் அனைவருக்கும்

எங்களது உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் அருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

WISH YOU ALL A VERY HAPPY AND PROSPEROUS
NEW YEAR 
2009



RAGHAVAN AND FAMILY, NIGERIA



Monday, December 29, 2008

நானும், விகடனும்

நான் 1996 முதல் 2001 வரை சைனாவில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். நமக்கோ புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு.அங்கு தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை.

அப்போதுதான் தெரிந்தது,  ஆனந்த விகடனுக்கு, சந்தா செலுத்தினால், வெளி நாட்டு வாசகருக்கு அஞ்சலில் அனுப்பி வைப்பார்கள் என்று.  என்ன நான் இருந்த இடத்திற்கு விகடன் அனுப்பிய நாளில் இருந்து 14வது நாள் தான் கிடைக்கும்.

நான், தங்கமணிக்கு போன் போட்டு, விகடன் ஆபிஸில் போய் பணம் கட்டிவிட்டு வாம்மா எனச் சொன்னேன்.

அவரும் பணம் கட்டி விட்டு வந்தார். எனக்கும் விகடன் எனக்கு கிடைக்க ஆரம்பித்தது. முதல் இதழ் வந்த்து. கவரில் என்னுடைய பேர், விலாசம்,  ஐடி நம்பர், மற்றும் expiry date என்றும் இருந்தது.

நான் அவர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பினேன்.  Expiry date என்று போடாதீர்கள், அதற்கு பதிலாக Valid up to  எனப்போடுங்கள் என்று.

நம்பினால் நம்புங்கள்,  அதற்கு பின் வந்த 4 வது விகடன் கவரில் Valid upto என்றுதான் போட்டு இருந்தார்கள்.

நான் அங்கு இருந்தவரை விகடனுக்கு பணம் கட்டி வாங்கிக்கொண்டு இருந்தேன். அங்கு நல்ல மழை பெய்த சம்யம், இரண்டு வாரங்கள் எனக்கு விகடன் கிடைக்கவேயில்லை.  நான் திரும்பவும் ஒரு இ-மெயில் அனுப்பிய போது, அவர்கள் உடனே இரண்டு புத்தகங்களையும் அனுப்பிவிட்டார்கள்.  

என் அனுபவத்தில், விகடன், என்றுமே அவர்கள் வாசகர்களை மதிப்பவர்கள்.

இப்போ விகடன்.காம் பணம் கட்டி படித்து கொண்டு இருக்கின்றேன்.  இருந்தாலும் புத்தகமாக படிப்பதில் உள்ள ஒரு மஜா, இதில் இல்லை. என்ன நான் சொல்றது சரிதானே...

இந்த நினைவலைகளை தூண்டி, என்னை எழுத வைத்த வால் பையனுக்கு நன்றி.
அப்படியே இதைப்போய் படியுங்களேன்..


குடுகுடுப்பை அவர்கள் சொன்னதை இங்கு சேர்த்துள்ளேன்...  யாருக்காவது சரியான காரணம் தெரிந்தால் சொல்லவும்

Blogger குடுகுடுப்பை said...

எனக்கு தெரிந்தவரை சரிதான், இப்போ விகடன் லின்ங் சில நெரங்களில் லேட்டாகுது ஏன்னு தெரியல


Saturday, December 27, 2008

பட்டாம்பூச்சி விருது

எனக்கு பட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்குப்பா

[butterfly_award.JPG]


பட்டாம்பூச்சி விருது கொடுத்தவர் : ரம்யா தேவி அவர்கள்

பட்டாம்பூச்சி விருது பெறுபவர் : யாரு நான் தேன்..இராகவன் நைஜிரியா

ரம்யா அவர்களுக்கு பட்டாம் பூச்சி விருது கொடுத்தவர் : பூர்ணிமா சரண் அவர்கள்

பூர்ணிமா அவர்களுக்கு கொடுத்தவர் : விஜய் அவர்கள்

விஜய் அவர்களுக்கு விருது கொடுத்தவர் : திவ்ய ப்ரியா அவர்கள்

திவ்ய ப்ரியாஅவர்களுக்கு விருது கொடுத்தவர் : G3 அக்கா (பிராவாகம்) அவர்கள்

G3 அக்கா அவர்களுக்கு கொடுத்தவர் : கார்த்தி அவர்கள்

(என்னால முடிஞ்ச அளவு கண்டு பிடிச்சுட்டேன்.. இதுக்கு மேல யாரவது கண்டுபிடிப்பாங்க..)

இவங்களுக்கெல்லாம் கிடைச்சது சரிதான்.. இந்த லிஸ்ட்ல நான் எங்க வரேன்னு எனக்கு புரியவேயில்லை.. பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு ஜாலியா கும்மி அடிச்சுகிட்டு, தமிலிழில் ஓட்டு போட்டுகிட்டு இருந்த எனக்கு..அதுவும் Coolest .. ரொம்ப குளிருதுப்பா..

சரி, சரி விருது கிடைக்கிறதுன்னா சும்மாவா..

கிடைச்சுதுன்னா வாங்கி போட்டாச்சு...

அடுத்து யாருங்க டாக்டர் பட்டம் கொடுக்க போறீங்க.. (வ.மு அவர்களை காக்கா பிடிக்க வேண்டும் - குடுகுடுப்பை, துக்ளக் மகேஷ், அது சரி, நசரேயன் சிபாரிசு பண்ணுவார்கள் என நம்புகின்றேன்... யார் சிபாரிசு செய்தாலும் அவர்களுக்கு தனியாக black label, green label, gold label, Balentine, Chivas Regal, Black Dog, Bacardi, Smir Off, Beefeater இதில் ஒன்று தனியாக கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும் )

எவ்வளவோ நல்லவர்கள், வல்லவர்கள் இந்த வலைப்பூ உலகத்தில் இருக்க, எனக்கு விருது கொடுத்த தங்கச்சி ரம்யா அவர்களுக்கு நன்றிகள் பல.. (அண்ணன் மேல உள்ள பாசத்தால் அவங்க கொடுத்திட்டாங்க.. என்ன பண்ணுவது.. பாசம் கண்ண மறைச்சுடுச்சு..அதுக்காக அவங்க மேல கோபப்படாதீங்க)

இந்த விருதை நான் இன்னும் மூன்று பேருக்கு பிரிச்சு கொடுக்க வேண்டும்.. அவர்கள்

1. அன்புத்தம்பி அணிமா - வாரத்திற்கு ஒரு பதிவாவது போட வேண்டும் என்பதற்காக

2. நண்பர் முரு - என்கிற அப்பாவி.. மிக அழகாக எழுதுவதற்காக

3. நண்பர் coolzkarthi - அப்போ அப்ப மொக்கை போடுவதற்கும், புதிர் போடுவதற்கும்

இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது

  • இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போடணும்.
  • உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த ராகவனை மறக்காதீங்க
  • முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்
  • தங்கச்சி பாசத்தில் எனக்கு இந்த விருதை கொடுத்திருக்காங்க. ரொம்ப நன்றி தங்கச்சி..


கடைசியாக என் அம்மா அவர்கள் சொல்வது தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது

எதுக்கோ அரைக்காசு கிடைச்சுதாம், அத வச்சுகிட்டு அது ஆடுமாம், பாடுமாம், அரக்காச தண்ணியில போடுமாம், அப்புறம் தேடுமாம், அர்த்த ராத்திரில குடை பிடிக்குமாம்... நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சுங்களே...








Wednesday, December 24, 2008

கார் ஓட்டிய அனுபவம்

எல்லோருக்கும் கம்பெனில வேல செய்ய ஓவர் டைம் கொடுப்பாங்க.. நம்ம விஷயம் வேற மாதிரிங்க.. நம்ம மேலதிகாரிக்கு நம்ம பிடிச்சு போச்சுங்களா.. அவர் நான் லீவுல போகும் போது, இந்தியாவில் இருந்து திரும்பி வரும் போது டிரைவிங் லைசன்ஸ் கூடத்தான் வர வேண்டும் என கண்டிச்சு சொல்லி அனுப்புனாருங்க.. நாமும் மடிப்பாக்கத்தில இருக்கிற XXX டிரைவிங் ஸ்கூல் போய் அந்த டிரைவிங் ஸ்கூல் முதலாளியைப்பார்த்து பணத்தையும் கட்டியாச்சுங்க.. பேருக்கு டிரைவிங்கும் கத்துகிட்டு..லைசென்ஸ்ம் வாங்கியாச்சுங்க..

சைனா போய் நம்ம தலைவர்கிட்ட லைசன்ஸ் வாங்கியாச்சு அப்படின்னு காண்பிக்க அவரும் அவருடைய நிசான் கார கொடுத்து (நாம கத்துகிட்டது மாருதிங்க) ஓட்டு அப்படின்னாரு..

முதல்ல வண்டியில சாவிய போட்டு ஸ்டார்ட் பண்ணி,  கிளட்ச அமுக்கி, முதல் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரில் கால வச்சதுதாங்க தாமசம், அவரு பயந்து போய், stop, stop அப்படின்னு கத்தினாருங்க.. (ஏன்னு கேட்கிறீங்களா.. வண்டி எடுக்கும்போது வண்டி மெதுவா ஓட ஆரம்பிக்கனுங்க.. குதிக்க கூடாது.. )

முதல்ல நல்லா வண்டி ஓட்ட கத்துக்க.. அப்புறமா இங்க லைசன்ஸ் வாங்கலாம் அப்படின்னு சொல்லிட்டாருங்க.. 

அதுக்காகத்தான் 1 மாசத்துக்கு தினமும் 1 மணி நேரம் ஓவர் டைம் கொடுத்து அவர் வண்டியையும் கொடுத்து கம்பெனி யார்ட்ல (அங்கதான் சாயங்காலம் 6 மணிக்கு மேல யாரும் இருக்க மாட்டார்கள்) ஓட்ட பழகிக்கொடுத்தாருங்க.. இதுதாங்க வண்டி ஒட்ட கத்துக்க ஓவர் டைம் வாங்கின விஷயம்.. 

நம்ம ஊர்ல இடது ப்க்கம் ஓட்டணுமிங்க.. சைனாவில் வலது பக்கம் ஓட்டணுமிங்க.. நம்ம நண்பர் ஒருத்தர் எப்போதும் கூட வருகின்றவர், வலது பக்கம் ஓட்டு அப்படின்னு ஞாபகப்படுத்திக்கிட்டே வருவாருங்க. அவர் வேலையை ராஜினாமா பண்ணிகிட்டு போய்டாருங்க. அவரு இருந்த வரைக்கும் எல்லாம் சரியா போய்கிட்டு இருந்தது. 

3 வருஷம் நல்லாதான் வண்டிய ஓட்டிகிட்டு இருந்தோமுங்க.  

2000 வருஷத்தில 3 வாரம் லீவுல நம்ம ஊருக்கு வந்திட்டு திரும்பி போனேங்க.. 
ஒரு நாள் நானும் என்னுடைய செகரட்டரியும் டாக்ஸ் ஆபீஸிக்கு போய்ட்டு திரும்பி வந்திகிட்டு இருக்கும் போது, இந்தியாவில் ஓட்டுகின்ற ஞாபகத்தில் இடது பக்கம் வந்துட்டேங்க.. நேரா ஒரு வண்டி வருதுங்க... நம்ம ஊர் ஆம்னி டைப் வண்டிங்க அது... நாம அன்னிக்கு ஓட்டிகிட்டு இருந்தது சாண்ட்ரோ டைப் வண்டிங்க.. அப்ப கூட மனசுல தோணலங்க பிரேக் போடணும்னு.. மனசுகுள்ள ஒரு நினைப்பு, இந்த ஆள் ஏன் ராங் சைடுல வரான் அப்ப்டின்னு.. நேரே கொண்டு போய்... டமால்..   இரண்டு நிமிஷம் ஒன்னும் புரியலங்க... 

முன்னாடி வந்த காரின் முன்பக்க கண்ணாடி (windshield) சினாமாவில காண்பிக்கற மாதிரி பறந்து போச்சுங்க.. அந்த வண்டியின் ஓட்டுனருக்கு தலையில் சிறு காயம்ங்க..

நம்ம செகரெட்டரிக்கு தோள்பட்டை மூட்டு நழுவிடுச்சுங்க..

நமக்குங்க, முட்டில சரியான அடிங்க, சீட் பெல்ட் போட்டதால தப்பிச்சுட்டேங்க.. நம்ம வண்டிக்குங்க சரியான அடிங்க.. முன் பானட், கண்ணாடி எல்லாம் நொருங்கி போச்சுங்க..

இதில் ஒரு பெரிய ஆபத்தில் இருந்தும் தப்பிச்சோமுங்க், நான் வண்டி ஓட்டிகிட்டு போனது ஆற்றின் கரை மேலங்க.. வண்டிக்கு இடது பக்கம் ஆறு ஓடிட்டு இருக்குதுங்க.. தப்பித்தவறி ஆறுல விழுந்திருந்தா, 20 அடி ஆழம் வேறங்க..

இதனால், இப்பொதெல்லாம் வண்டி ஓட்டும் போது பலதடவை சொல்லிக்கிறது என்ன அப்ப்டின்னாங்க.. இந்த ஊர்ல வலது பக்கம் ஓட்டணும், கூட வரவங்கிட்ட ஒரு தடவை நான் இடது பக்கம் போனா உடனே சரி பண்ணுங்க அப்படின்னு சொல்லிப்புடறதுதானுங்கோ..

மேலும் சீட் பெல்ட் போடம வண்டி ஓட்டுறதில்லைங்கோ..  வேற யார் ஓட்டினாலும் சீட் பெல்ட் போடம உட்காரவதில்ங்க.. நம்ம ஊர்ல வண்டி ஓட்டும்போது கூட சீட் பெல்ட் போடமா போறதில்லைங்க.. நம்ம ஊர்ல நிறைய நண்பர்கள் இதுக்காக நம்மல கிண்டல் பண்ணுவாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லைங்கோ.. நம்ம உசுரு நமக்கு முக்கியம்.. என்ன நான் சொல்றது சரிதானுங்க..

வண்டி ஓட்டும் போது வேறு சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கறதுலீங்க..

என்னங்க..  இது உங்களுக்கு பிடிச்சா ஒரு பின்னூட்டம் போடுங்களேன்... அப்படியே தமிலிழில் போய் உங்க பொன்னான வாக்குகளையும் பதிவு செஞ்சுடுங்க


போணி... லாபம்

எல்லோருக்கும் வணக்குமுங்க..

நம்ம நண்பர்கள் கொடுத்த தெம்புல ஒரு ப்ளாக் (ஆ)ரம்பிச்சுட்டேங்க..
சரி எப்படி ஆரம்பிக்கறது அப்படின்னு எல்லாம் நம்ம கணிணியில வந்துச்சுங்க.. அதை வச்சு ஆரம்பிச்சுட்டேங்க..  ஆனா எப்படி எழுதறதுன்னு இன்னும் புரியலங்க..

நானும் எதாவது எழுதுவோமுங்க.. நீங்க எல்லாம் படிக்க வேண்டியது உங்க தலைவிதிங்க..

இந்த மாதிரி ப்ளாக் ஆரம்பிக்கணும் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க.. அவங்களுக்காக ஆரம்பிச்சுதுதானங்க இது.. அவங்க எல்லாம் யாரு ..

அணிமா, அறிவிழி, அதிரை ஜமால், அதிஷா, பழமைபேசி, சாரல், ரம்யா, குடுகுடுப்பை, வருங்கால முதல்வர், கிரி, பதிவு,  ஸ்ரீராம் மற்றும் பலர்..

கொலை செய்தவனை விட தூண்டியவனே குற்றவாளி.. என்னை ப்ளாக் ஆரம்பிக்கச்சொல்லி தூண்டியவர்கள் மேலே குறிப்பிட்டவர்கள் தான். அதானால் யாரவது என்னை கடித்து குதற விரும்பினால், மேலே உள்ளவர்கள்தான் அதற்கான பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

இப்போதைக்கு பை.. பை.. சொல்லிட்டு பின்னாடி வரேணுங்க..


வந்தவங்களுக்கும், வராதவங்களுக்கும் ரொம்ப நன்றிங்க..

கட்டி கொடுத்த சோறும், சொல்லி கொடுத்த வார்த்தைகளும் எத்தனை நாளுக்கு வரும்..    (இஃகி..இஃகி.. பழமைபேசி படித்ததின் தாக்கம்.. வேறு ஒன்னுமில்லீங்க)