Friday, November 12, 2010

மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??

மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு.

சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க செய்யும் ஏரி. அந்த ஏரியின் இன்றைய தோற்றம். (ஆகஸ்ட் மாதம்... இந்தியா வந்த போது எடுத்தப் படங்கள்...)



ஏரி ஒரு பகுதி.... எதிர் கரையில் சுகமாக மேயும் எருமை மாடுகள்.



ஐயப்பா நகர் சன்னதி தெருவின் சாக்கடை ஏரியை நோக்கி



ஐயப்பா நகர் சன்னதி தெரு சாக்கடை ஏரியை வந்தடைந்துவிட்டது. !!



சாக்கடை ஏரியில் சங்கமிக்கும் இடம்.. புண்ணிய பூமி!!



ஏரிக் கரையில் கொட்டப் பட்டு இருக்கும் குப்பைகள். ரொம்ப சுத்தமானவங்க வீட்டில் இருக்கும் குப்பைகள் ஏரிக் கரையில் !!


மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை. இங்கு வளரும் மீன்களை சாப்பிட்டால் எல்லா வியாதிகளும் நிச்சயம் வரும் - 100% கியாரண்டி என்று போடவில்லை.!!


ரொம்ப புத்திசாலி இவர்... வீட்டு சாக்கடையை தெருவில் விட்டுள்ளார் (12 வது தெரு வாசி)



அவரேதான்... வீட்டு சுவர் ஓரமாக அணை கட்டியது மாதிரி பள்ளம் வெட்டி அதில் சாக்கடை தண்ணீர்.


தெருவெங்கும் அந்த சாக்கடை தண்ணீர். அந்த வழியாகத்தான் நிறைய பள்ளிக் குழைந்தகள் செல்வார்கள். தினமும் இரண்டு குழைந்தகளாவது சைக்கிளில் இருந்து விழுந்து விடுகின்றனர்.


புதிதாக எந்த நீர் நிலைகளையும் யாரும் ஏற்படுத்த வேண்டாம். இருக்கும் நீர் நிலைகளை கூட நம்மால் காப்பாற்ற இயலைவில்லை என்றால் வருங்கால சந்ததியனர் தண்ணீருக்கு கஷ்டப்படப் போவது உறுதி.