தமிழ் ஆசிரியர் : தவறு செய்த மாணவரின் காதை திருகிக்கொண்டே கேட்டார் - இனிமே இந்த பாடம் மறக்குமா .. மறக்குமா
மாணவன் : சார், மரக்காது, மரக்காது..
தமிழ் ஆசிரியர் : மரக்காது தானே, அப்படின்னா காது வலிக்காது நல்லா திருகலாம்.....
___________________________________________________________________
ஆசிரியர் Progress Report - ல் இப்படி எழுதியிருந்தார் - Your SUN is very WEEK in English and needs tution..
மாணவரின் தந்தை : You are also very WEAK in English
___________________________________________________________________
வகுப்பறையில் சத்தம் போட்டுக்கொண்டு இருந்த மாணவர்களைப் பார்த்து ஒரு ஆசிரியர் இவ்வாறு சொன்னார்
ஏ.. நாய்ஸ்... Don't make Noise
___________________________________________________________________
இது ஒரு உண்மைச்சம்பவம்..
மாணவன் தேர்வு நடக்கும் இடத்தில் சுமார் 1 மணி 30 நிமிடங்கள் (தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடங்கள்) சும்மாவே உட்கார்ந்து இருந்தான். பொறுத்து பார்த்த ஆசிரியர், அந்த தேர்வுக்கு உரிய பாடப்புத்தகத்தை எடுத்து கொடுத்து தேர்வு எழுதச்சொன்னார்..
15 நிமிடம் கடந்தும் அந்த மாணவன் சும்மாவே இருக்கவே, ஆசிரியர், ஏன் சும்மா இருக்க, புத்தகத்தை பார்த்து பதில் எழுத வேண்டியதுதானே எனக்கேட்டார்..
அதற்கு அந்த மாணவர் கூறிய பதிலை கேட்டவுடன்.. ஆசிரியருக்கு மயக்கம் வராத குறைதான்..
சார், ஆன்ஸர் எங்க இருக்குன்னு தெரியல... !!-:)
____________________________________________________________________
படிக்கும் காலத்தில், ஒருதடவை ஆசிரியர் பெரிய சைஸ் நோட் புக் வாங்கி வரச் சொன்னார்..
நானும் என் தந்தையிடம் வந்து, அப்பா டீச்சர் நீட்டு நோட் புக் வாங்கி வரச்சொன்னார்கள், வாங்கி கொடுங்கள் என்றேன்.
அவரும் சிறிய நோட்டை வாங்கி கொடுத்தார்.. நான் இது இல்லையப்பா நீட்டு நோட் புக் வாங்கி வரச்சொன்னார்கள், காம்போசிஷன் எழுதுவதற்கு எனச்சொன்னபோது அவர்..
அவங்க நோட் புக் Neat - அதாவது சுத்தமாக இருக்க வேண்டும் எனச்சொல்லுகின்றார்கள், நீதான் அதை தப்பாக புரிந்து கொண்டு விட்டாய்....!!
அதுக்கபுறம் அழுது அடம்பிடித்து, பெரியச நோட் புக் வாங்கியது பற்றி இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகின்றது.
___________________________________________________________________
நான் என் அப்பாவிடம் : அப்பா எனக்கு அந்த சோப்பு வாங்கிதாங்கப்பா.. அதுதான் அழகுக்கு அழகு சேர்க்கும் அப்படின்னு விளம்பரம் பண்றாங்க..
அப்பா : அதெல்லாம் சரிடா.. அது அழகுக்கு தான் அழகு சேர்க்கும்.. உனக்கில்லை.. அதனால் அது வேண்டாம்.. இந்த சோப்பே உனக்கு போறும்.
____________________________________________________________________
எங்கோ படித்தது..
திரு. கி.வா.ஜ அவர்கள் சிலேடையில் வல்லவர். ஒருமுறை அவர் நண்பர் வீட்டுக்கு போயிருந்த போது, பாலும், பழமும் கொடுத்துள்ளார்கள். அவர் சிலேடையாக, இங்கு எனக்கு பழம் பால் கிடைத்தது என குறிப்பிடாராம்.
(பழம் பால் - பழைய பால் என்கிற அர்த்தமும் வரும்)
____________________________________________________________________
கி.வா.ஜ அவர்கள் புத்தகம் ஒன்றில் படித்தது
தமிழாரிசியர், ஆங்கிலப் புலமை இல்லாதவர் பாடம் எடுத்துக் கொண்டு இருக்கின்றார். அப்போது மாணவர்களைப் பார்த்து அண்டருலகம் என்றால் என்ன வென்று தெரியுமா எனக் கேட்கின்றார்.
ஒரு மாணவர் எழுத்து, அண்டருலகம் என்றால், பாதள உலகம் என்கின்றார்.
ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை.. அண்டருலகம் என்றால், தேவர் உலகம் அது மேலே தானே இருக்கும், இவன் ஏன் பாதாள உலகம் என்று சொல்கின்றான். அண்டவர் என்றால் தேவர் என்ற அர்த்தம் அல்லவா என்று கேட்க, அப்போதுதான் அந்த மாணவர், under என்ற ஆங்கில வார்த்தையை இதனுடன் இணைத்து விட்டார் எனப் புரிந்ததாம்.
____________________________________________________________________
திரு கி.வா.ஜ. புத்தகத்தில் படித்த மற்றொரு விஷயம்.
படிப்பவர்கள் எவ்வளவு ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் இது..
அந்த மாணவர், முனைவர் பட்டம் பெறுவதற்க்காக ஒரு பேராசியரிடம், சேருகின்றார். அதிலும் தமிழ் முனைவர் பட்டம். பேராசியர், அவரிடம் நூலகத்தில் போய் அழற்படுகாதை எடுத்து வா என்று சொல்லியுள்ளார். அந்த மாணவரும், நூலகத்திற்கு சென்று அழற்படுகாதையை தேடு தேடு என்று தேடிவிட்டு, பேராசியரிடம் வந்து, ஐயா, நூலகத்தில் அழற்படுகாதை என்ற நூல் இல்லை என்கின்றார். பேராசியர், உடனே, அழற்படுகாதை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு பகுதி, நான் தங்களை அதைத்தானே எடுத்து வரச் சொன்னேன், நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா என்று கூறினாராம்.
-----------------------------------------------------------------------------------------------
எப்படி இருந்தது என்று ஒரு பின்னூட்டமும், உங்கள் பொன்னான வாக்குகளை, தமிழிஷிலும், தமிழ்மணத்திலும் போடும்படி மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.