பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...
எதாவாது பதிவு போடணும்..
என்னத்தப் பத்தி பதிவு போடுவது..
கவிதை போடலாம் என்றால்...
கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..
...
இல்லாட்டி...
காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....
இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..
சரி கவிதை வேண்டாம்..
அரசியல்....
நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்... இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா.. அதுவும் வம்புதான்...
சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...
பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..
நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, இந்தியாவில் இருந்தாலும் பரவாயில்லை, நைஜிரியாவில் அப்புறம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்.. இதுவும் போயிடுச்சு..
நண்பர் பழமைபேசி மாதிரி, தமிழ், தமிழ் வார்த்தைகள் போடலாம் பார்த்தா, நம்ம பவுசு நமக்குத் தெரியும்.. வேண்டாம் விட்டு விடு...
ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..
இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..
சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா, கார்த்தல காபி குடிகிறமோ இல்லையோ, கணினியில் மெயில் செக் பண்ணலாம் அப்படின்னு வந்த், www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம், இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..
ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...
புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..
இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...
எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,
என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...
எதாவாது பதிவு போடணும்..
என்னத்தப் பத்தி பதிவு போடுவது..
கவிதை போடலாம் என்றால்...
கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..
...
இல்லாட்டி...
காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....
இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..
சரி கவிதை வேண்டாம்..
அரசியல்....
நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்... இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா.. அதுவும் வம்புதான்...
சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...
பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..
நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, இந்தியாவில் இருந்தாலும் பரவாயில்லை, நைஜிரியாவில் அப்புறம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்.. இதுவும் போயிடுச்சு..
நண்பர் பழமைபேசி மாதிரி, தமிழ், தமிழ் வார்த்தைகள் போடலாம் பார்த்தா, நம்ம பவுசு நமக்குத் தெரியும்.. வேண்டாம் விட்டு விடு...
ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..
இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..
சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா, கார்த்தல காபி குடிகிறமோ இல்லையோ, கணினியில் மெயில் செக் பண்ணலாம் அப்படின்னு வந்த், www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம், இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..
ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...
புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..
இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...
எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,
என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...