மாலை நேரம் அண்ணன் கேபிளாரை அழைத்தேன். அண்ணன் அப்போ ரொம்ப பிசியா கொடைக்கானலில் டிஸ்கஷனில் இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவேன் என்றும் பின்னர் அழைப்பதாகவும் சொன்னார். சற்று நேரத்திற்கெல்லாம் அண்ணன் தண்டோரா அழைத்தார். நலம் விசாரித்தார். ஜூன் 29, 2009 அன்று பதிவர் சந்திப்பு நடேசன் பூங்காவில் இருப்பதாகவும் அவசியம் வரவேண்டும் என்றும் அழைத்தார். அதற்கு முன்பாக சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நிச்சயம் சந்திக்கலாம் என்று கூறி கேபிள் அண்ணனும் வந்துவிடட்டும் என்றும் கூறினேன்.
அன்று மாலையே அண்ணன் இலக்கியா குடந்தை அன்புமணி அவர்களையும் அழைத்து இருந்தேன். அவர் நிச்சயம் மறு நாள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்.
ஜூன் 26, 2009
அண்ணன் இலக்கியா அன்பு மணி மாலை 6.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அவர் கூட பல விசயங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். குறிப்பாக குடந்தை யில் வாழ்ந்த நாட்களைப் பற்றியும், ஊரைப்பற்றியும், துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும் பேசினோம். நான் பதிவர் சந்திப்பிற்கு அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்திச் சொன்னார். பதிவர் சந்திப்பில் அண்ணன் உண்மைத் தமிழன் வருவார் என எதிர்பார்த்து இருப்பதாகவும், அவர் வந்தால் அவரிடம் சில கேள்விகள் (முக்கியமாக கவிதை என்று சொல்லி ஒரு இடுகைப் போட்டாரே அதைப் பற்றி - அதைப் படிக்க இங்க சொடுக்கவும்) கேட்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அதை அண்ணன் இலக்கியா ஒரு பதிவாகவே போட்டுவிட (அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்), அண்ணன் உண்மைத் தமிழன் பதிவர் சந்திப்பில் இருந்து அப்ஸ்காண்ட்.
பெ....ரி...ய பதிவாக எழுதி தள்ளிய அண்ணன் உண்மைத் தமிழன் அவர்கள், நேற்று மட்டும் கிட்டதட்ட 16 இடுகைகள் எழுதி டரியலாக்கிவிட்டார். அண்ணே மத்தவங்க பதிவையும் நாங்க எல்லாம் படிக்கணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் போடுங்கண்ணே... தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போடணும், பின்னூட்டம் போடணும், நாங்களும் இடுகை எழுதணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க...
பின்னர் அண்ணன் குடந்தை அன்புமணி, அவர்கள் DMS அருகில் இறங்கி, வேறு சென்றார்.
ஜூன் 27, 2009.
அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா இருவரையும் சந்திக்கலாம் என்று அண்ணன் கேபிளாருக்கு தொலைப்பேசினேன். அவரும் அண்ணே சைதாப்பேட்டை வந்திடுங்க அண்ணன் தண்டோரா அலுவகத்தில் சந்திக்கலாம் என்றும் சொன்னார்.
சரி என்று சைதாப்பேட்டைக்கு வந்து அவருடன் அண்ணன் தண்டோரா அலுவலகத்தில் சந்திக்கப் போனப்போது அங்கு அண்ணன் வண்ணத்துப்பூச்சியார் சூர்யா அவர்கள் இருந்தார்.
மிக்க சந்தோஷமாக இருந்தது. முதன் முதலாக இவர்களைப் பார்த்தப் போதும், அது முதல் சந்திப்பு மாதிரியே இல்லை. நெடு நாள் பழகிய நட்பு மாதிரி இருந்தது. அண்ணன்கள் கேபிளாரும், தண்டோராவும் வாங்கிக் கொடுத்த சாத்துக்குடி ஜூசுக்கு ஒரு பெரிய “ஓ”. அன்று பல் மருத்துவர் அவர்களின் அப்பாயின்மெண்ட் இருந்ததால், நெடு நேரம் அவர்களுடன் செலவழிக்க முடியவில்லை.
இதற்கு பிறகு இரண்டு / மூன்று முறை அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா இருவரையும் சந்தித்தேன்.
அண்ணன் ச்சின்னப்பையன் அவர்கள் இந்தியா வந்தபோது அவருடன் அண்ணன் தண்டோரா அலுவலகத்தில் வைத்து சந்தித்தோம்.
அண்ணன் கேபிளாரிடம், ஒரு விடியோ காசெட் சரியில்லை எனவும், அதை டிவிடி யாக மாற்ற உதவிச் செய்ய இயலுமா என்றுக் கேட்டேன். அண்ணன் கேபிளார் தன்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சென்னை ரிச்சி தெருவில் உள்ள பல கடைகளில் ஏறி இறங்கி, கடைசியாக ராயப்பேட்டையில் உள்ள ஸ்டாலின்ஸ் என்ற இடத்தில் கொடுத்து அதை டிவிடியாக மாற்றிக் கொடுத்தார். விடியோ காசெட் மாற்றுவதில் என்ன கஷ்டம் என்று நீங்க நினைப்பது எனக்குப் புரிகின்றது. அது Sony Hi8 காசெட். அந்த காசெட் சரியாக வேலைச் செய்யாமல், எங்கேயோ சிக்கிக் கொண்டு, விடியோ காமில் போட்டால் ஓடவேயில்லை. அதை நானும் எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. அந்த காசெட்டில் அப்படி என்னதான் இருக்கு என்றால், என் மகன் அரவிந்த் சிறுவனாக இருந்த போது அடித்த லூட்டிகள், நடந்தது, ஓடியது எல்லாம் அந்த காசெட்டில்தான் இருந்தது. இந்த உதவி செய்த அண்ணன் கேபிளாருக்கு நன்றிகள் பல. உண்மையாகச் சொல்லுகின்றேன் அன்று அவர் எனக்காக அலைந்ததும், நண்பர்கள் பலரை அழைத்து தொலைப் பேசியதும், பின்னர் ஏக்னாத் போய் முயற்சி செய்த்தும் மறக்க இயலாதது. நன்றி கேபிள்அண்ணே... கேபிள் அண்ணன் கிட்ட கேளுங்க, நிச்சயம் சரி செஞ்சு கொடுப்பார் என்று சொன்ன புதுகை அப்துல்லா அண்ணனுக்கும் நன்றி.
அண்ணன் கேபிளாரும், அண்ணன் தண்டோராவும் நான் நைஜிரியா திரும்பும் முன் என்னை வீட்டில் வந்து சந்தித்தனர். அப்போது இணைய நண்பர்களுக்காக பதிவர் ஸ்ரீ... அவர்களும் வந்து இருந்தார்.
அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களும் வீட்டிற்கு வந்து இருந்தார். மகன் அரவிந்து கூட அவரின் படமும் .. அரவிந்து கூட அப்துல்லா அண்ணன் பேசிகிட்டு இருந்தார். என் கூட பேசியவை ரொம்ப குறைவு. அவர்கள் இருவரும் பேசியதை நம் இடுகையில் போடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அதைப் பற்றி எதுவும் இந்த இடுகையில் கிடையாது. (உண்மையைச் சொல்லப் போனால் இருவரும் என்னைப் பேசவே விடவில்லை..)
அண்ணன் கேபிளார் அவர்களை படம் எதுவும் எடுக்கவில்லை. எப்போதும் மனதிலேயே இருப்பதால் படங்கள் எடுக்கவில்லை.
அண்ணன் புதுகை அப்துல்லா, அரவிந்த்..
அண்ணன் தண்டோரா (இந்த படம் எடுத்தது அண்ணன் கேபிளார்)
இணைய நண்பர்களுக்காக .... ஸ்ரீ.. (இந்தப் படம் எடுத்ததும் அண்ணன் கேபிளார்தான்...)
அடுத்து
சென்னை வலைப்பதிவர் சந்திப்பு மற்றும் மதுரைப் பதிவர்கள சந்திப்பு பற்றி...
தொடரும்