Showing posts with label வலை நண்பர்கள் சந்திப்பு. Show all posts
Showing posts with label வலை நண்பர்கள் சந்திப்பு. Show all posts

Thursday, March 11, 2010

மாபெரும் நைஜிரியா வலைச் சந்திப்பு..

11.02.2010 அன்று நடைப் பெற்ற பதிவர் சந்திப்பு பற்றிய விவரங்கள் அறிய...

விருத்தாசலம் போய் பாருங்க... (வலைப்பூ பெயர் விருத்தாசலம்..)

இரண்டு படங்கள் தான் அண்ணன் இளமுருகன் போட்டு இருக்கார்...

மீதி படங்கள் விரைவில் எதிர் பாருங்கள்...

உங்களுக்குகாக... ஒரே ஒரு படம் மட்டும் நான் இங்க போட ஆசைப் படுகின்றேன்...





பார்க்க நல்ல இருக்கில்ல.. படம் எடுத்தவர்... நண்பர் யோக்பால்...

Tuesday, December 15, 2009

வலைப்பதிவர்கள் சந்திப்பு - 11-12-2009



ரொம்ப நாளாச்சு. .. அபுஜாவில் பதிவர் சந்திப்பை நடத்தி...

ஒரு பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பை நடத்தி விட மனது துடித்தது. உடனே தம்பி அணிமா (இன்னமும் பதிவர்தான்.. !!), நேசமித்ரன் இருவரையும் கூப்பிட்டுச் சொன்னபோது, தம்பி நேசன் கவிதை நடையில் பதில் தெரிவித்தார். அந்த கவிதை

ஆயிரம் கதவுகளுக்கு அப்பால்
ஆதவன் ஓளியும் விழியும் சமோவா (இராகவன்)
ரோங்கா (அணிமா) தீவுகளுக்கிடையே
கடக்கும் தேதிக் கோடு என்னைக் கழித்துச்சென்றது
ஆதலால் அண்ணே ஆகாதென்றான் நேசமித்ரன்.

பொருள் : அண்ணே வேலை ரொம்ப அதிகம். அதனால் என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றேன். சந்திப்பு இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.

கடந்த மே மாதம் நடந்த மாதிரி மிகப் பெரிய, உலகம் காணத, இந்த படைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற கோஷங்களுடன் நடந்த வலைப் பதிவர் மாநாட்டை இந்த வருடமும் நடத்திவிட வேண்டும் என தம்பி அணிமா ஆசைப் பட்டதால், அதை பற்றி முடிவு செய்வதற்காக இந்த சந்திப்பு என முடிவு செய்யப் பட்டது.

பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதால், இந்த வருடம் வலைப் பதிவர் அகில உலக மாநாட்டை நடத்துவது பற்றியும், உலக வங்கியில் கடன் வாங்க இயலுமா என்பதுப் பற்றியும் விவாதிப்பதற்காக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலை 7 மணியளவில் இந்த சந்திப்பு என ஏகமனதாக ஏற்பாடுச் செய்யப் பட்டு, 7.30 மணியளவில் சந்திப்பு ஆரம்பமானது. (செயலாளர் தன்னுடைய பதிவியின் பந்தாவை காண்பித்துக் கொள்வதற்காக வந்தது லேட்... எப்போதும் போல்..)

பலவிதங்களில் பேசியும், எந்தவிதமான முடிவும் எட்டப் படாததால், தேதி அறிவிக்கப் படாமல் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டது.

அப்போது எடுத்தப் படங்கள் உங்கள் பார்வைக்காக..



வலைப் பதிவர் சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்களை வரவேற்கும் நைஜிரியா வலைப்பதிவு சங்க பொதுச் செயலாளர் இராகவன்.



எங்கள் வலைப்பதிவு சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்கள் புகைப் படத்திற்கு கொடுத்த போஸ்..



சங்க பொதுச் செயலாளருடன் உயர் திரு. மனோஜ்


சங்கத் தலைவர் மற்றும் செயலாளர்



சங்கத் தலைவருடன் வாசகர் உயர் திரு. மனோஜ்



வெல்கம் டிரிங்ஸ் ???


தம்பி நேசமித்திரனுடன் தொலைப் பேசி உரையாடல்.. சங்க விஷயங்களைப் பற்றிப் பேசப் பட்டது.


சங்கத் தலைவர் ...


மோனோ ஆக்டிங் ??? (என்னோட பதவிக்கு யாரும் போட்டி போடமுடியாது.. )


சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க


பொறுப்பி :

1. மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி. இந்தப் புகைப் பட கருவி வாங்க எங்களுடன் வந்த தம்பி குசும்பன், சாரதி செய்த அண்ணன் சுந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த மனுஷனுக்கு ஏன் கேமிரா வாங்கி கொடுத்தீங்க என அவர்கள் மேல் யாரும் கோபப் பட்டு விடாதீர்கள். விதி... வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

2. அனைத்து கிளைச் சங்களுக்கும் சங்கப் பொருளாதார நிலைப் பற்றிய நிதி நிலை அறிக்கை தனி மடலில் அனுப்பப்பட்டுள்ளது.

3. நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

4. நிதி நிலைமை சீரான பிறகு, மாநாடு நடத்தப் படும் என்பதை மிகத் தாழ்மையுடன் அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.




Sunday, October 25, 2009

பாசப் பறவைகள் பாகம் - 7 (Final)

திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு ஜூலை 6, 2009.

ஜூலை 6, 2009, குன்னூரில் இருந்து காலை 9 மணியளவில் கிளம்பி, திருச்சிக்கு ஈரோடு வழியாகத்தான் செல்வதாக இருந்தேன். எப்போதும் போல் வடகரை வேலன் அண்ணாச்சியை தொடர்பு கொண்டு வழியைக் கேட்டுக் கொண்டு பின் போகலாம் என்று, அவரை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் திருப்பூர் வழியாக போங்க. ரோடு நல்லா இருக்கும். அப்படியே திருப்பூர் பதிவர்களையும் சந்திக்கலாம் என்றும் ஐடியா கொடுத்தார். வடகரை வேலன் அண்ணாச்சிக்கு நன்றி. சொன்னதோடு மட்டுமல்லாமல், பரிசல் காரன், வெயிலான் இருவரது தொலைப்பேசி எண்களையும் கொடுத்து அவர்களுக்கும் என் வருகையைப் பற்றி தகவலும் தெரிவித்தார்.

ஓவர் டு தெ டெலிகான் வித் பரிசல் அண்ட் வெயிலான்.

அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களிடம் தொலைப்பேசி எண் கிடைத்ததும், முதலில் அழைத்தது நண்பர் பரிசல் காரன் அவர்களைத்தான். அவர் அவசியம் வாங்க, பார்க்கலாம் என்றுச் சொன்னார்.

அடுத்து நண்பர் வெயிலான் அவர்களை அழைத்தேன். அண்ணே, திருப்பூர் அருகில் வந்தவுடன் அழையுங்கள். வழிச் சொல்லுகின்றேன் என்றுச் சொன்னார்.

சென்னையில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பர்ச்சேஸ் மேனேஜராக வேலை செய்த போது, பல தடவை திருப்பூர் சென்று இருக்கின்றேன். அப்போதெல்லாம், கோவையில் தங்குவேன். அங்கிருந்து கம்பெனி பி.ஆர்.ஓ நான் போக வேண்டிய இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று திரும்பி கொண்டுவந்து விடுவார். அதனால் வழிப்பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதில்லை.

திருப்பூரில், ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. டையிங், வாஷிங், பிரிண்டிங், எம்பிராடய்ரி எல்லாம் சென்னையை விட மலிவாக கிடைக்கும். சென்னையில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரை நாடுவதற்கு காரணம் இதுதான் என நினைக்கின்றேன். மேலும் தெரிந்தவர்கள் விவரமாக தெரிவிக்கவும்.

மதியம் 12 மணியளவில் திருப்பூரை நெருங்கியபின், நண்பர் வெயிலானை அழைத்தேன். அண்ணே எங்க இருக்கீங்க என்று கேட்டார். எப்போதும் போல் நான் வரும் வழியை சொல்லி அவரைக் குழப்பினேன். பின்னர் ரயில் நிலையம் செல்லும் வழி என்றுப் போட்டு இருக்கு அப்படின்னு சொன்னேன். அண்ணே நேரா வாங்க, உங்க வண்டி நம்பர் என்ன வென்றுச் சொல்லுங்க என்றுச் சொன்னார். நம்ப வண்டி நம்பரையும், கலரையும் சொன்னேன். ரயில் நிலையம் அருகில் வரும்போது, நண்பர் வெயிலான் தொலை பேசியில் அழைத்து அண்ணே உங்க வண்டியைப் பார்த்துட்டேன், அப்படியே ஓரம் கட்டுங்க என்றுச் சொன்னார்.

அவரும் அவருடைய நண்பர் தேவராஜனும் எங்களை அழைக்க வந்திருந்தனர்.

பின்னர் மதியச் சாப்பாட்டுக்கு எங்கு போவது என்று பலரை கூப்பிட்டு கேட்டு, அரோமா ஹோட்டலுக்கும் கூப்பிட்டுக் கொண்டு சென்றார்.

அங்கு சென்ற பின் நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், இராமன் குட்டி மூவரும் வந்தனர்.

பரிசல் அவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருப்பதால், எங்களை உணவருந்த ஆரம்பிக்குமாறும், பின்னர் அவர் வந்து சேர்ந்துக் கொள்வதாகவும் சொன்னார்.

நாங்க சாப்பிட்டு முடிச்ச பின்பும் பரிசல் அவர்கள் வர தாமதமானது. அன்று ஒரு ஷிப்பிங் இருப்பதால், குவாலிட்டி செக்கிங் போய் கொண்டு இருப்பதாகவும், அதனால் தான் தாமதம் என்றும் சொன்னார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கம்பெனிகளில், ஷிப்பிங் இருக்கும் போது, அங்கு வரும் குவாலிட்டி செக்கர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என எனக்கு நன்றாகவேத் தெரியும். எல்லாம் அனுபவம் தான். அது சரியில்லை, இது நொள்ளை, நொட்டை எல்லாம் சொல்லிகிட்டு திரிவாங்க. அவங்கதான் உலகத்திலேயே ரொம்ப பர்ஃபெக்ட் என்ற எண்ணத்துடன்.

அங்கிருந்து கிளம்பும் போது பரிசல் அவர்களும் நிறைய நேரம் அளவாவ முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. தொலைப்பேசியில் உரையாடும் போதும் அவருக்கும் அந்த வருத்தம் இருந்ததை உணர முடிந்தது.


வரும் போதே, அண்ணே இவங்க சொன்னது எதையும் நம்பாதீங்க அப்படின்னு சொல்லிகிட்டே வந்தார். என்ன செய்வது எல்லோரும் அவரை வல்லவர், நல்லவர் என்று சொல்லியிருந்தனர். சரிங்க என்று பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.

பின்னர் அங்கு அரோமா ஹோட்டல் வாசலில் கிட்டதட்ட 30 நிமிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, திருப்பூரில் சில டி-சர்ட் வாங்க வேண்டும் என்றுச் சொன்னேன்.

பரிசல் அவர்கள் வருவதற்கு முன் நாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டோம். பின்னர் ஒரு வழியாக பரிசல் அவர்கள் கம்பெனியில் எதோ சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக வந்துச் சேர்ந்தார்.
நண்பர் வெயிலானும், தேவராஜன் அவர்களும் கூடவே வந்து இருந்து, எல்லாம் வாங்கிக் கொடுத்தனர். அரவிந்திற்கு ஒரு சட்டை வாங்கி பிரசண்ட் செய்தனர்.

திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு, மிகச் சிறிய நேரம் என்றாலும், மிக அழகாக அமைந்தது.

மிக்க நன்றி திருப்பூர் நண்பர்களே.

சில படங்கள் தங்கள் பார்வைக்காக.


நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், பரிசல்காரன், வெயிலான், நான், இராமன் குட்டி (இவர் இன்னும் ப்ளாக் ஆரம்பிக்க வில்லை).



மேலுல்ல வரிசையில் பரிசல்காரன் அருகில் அமர்ந்திருப்பவர், வெயிலான் அவர்களின் நண்பர் தேவராஜன்.

பின் திருப்பூரில் இருந்து சுமார் 4.30 மணியளவில் கிளம்பி, கரூர் வழியாக திருச்சியை அடைந்த போது, இரவு மணி 8.30. கரூர் திருச்சி சாலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ் நாட்டில் நான் பயணப்பட்ட இடங்களிலே, இதுதான் மிக மட்டமான சாலையாக இருந்தது.

பல பதிவர்களையும் சந்திக்க ஆசைத்தான். முக்கியமாக அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுடன் தொலைப் பேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. அடுத்த முறை இந்தியா செல்லும் போது சந்திக்க வேண்டும். அதிஷா, லக்கிலுக் இவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாட வேண்டும் என எண்ணியிருந்தேன். அதுவும் என்னுடைய பல தனிப்பட்ட வேலைகளால் தடைப்பட்டுவிட்டது.

இந்திய பயணத்தில் வலைப்பதிவர்கள் பலரையும் பல இடங்களில் சந்தித்து, அவர்களுடன் அளவாவியது, அவர்கள் காண்பித்த கள்ளமில்லா அன்பு என்னை மிகவும் நெகிழவைத்தது என்னவோ நிஜம்.

இந்தியவில் இருந்து திரும்பிய பின், நைஜிரியாவின் பிரபல, பேமஸ், சூப்பர் பதிவர், என் ரத்ததின் ரத்தம், உடன்பிறவா சகோதரர், உடன் பிறப்பு, என்னை வலையுலகில் இழுத்துவிட்டு, தான் மட்டும் காணமல் போன அணிமா தம்பியுடன் சந்திப்பு மிக கோலாகலமாக நடந்தது. இந்தியப் பிரயாணம் பற்றி தம்பி விஜாரித்தார். எல்லாம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்ததுப் பற்றி சந்தோஷப்பட்டார். கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது.

அன்பு காண்பித்த பதிவர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும் பல.

இதுவரை இந்த தொடர் இடுகையைப் படித்து, பின்னூட்டமிட்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
என்றென்றும் அன்புடன்

இராகவன், நைஜிரியா.

Friday, September 25, 2009

பாசப் பறவைகள் பாகம் - 6

ஜூலை 2 & 3 கோவைப் பதிவர்கள் சந்திப்பு.

ஜூலை 2 ஆம் தேதி காலை மதுரையில் இருந்து புறப்பட்டு, கோவையை நோக்கிப் பயணம் ஆரம்பம். எனது ஊர்தியின் ஓட்டுனரைப் பார்த்து கேட்டேன்..

நான் : தம்பி, கோயமுத்தூர் வழி தெரியுமான்னு கேட்டேன்.

ஓட்டுனர் : நல்லாத் தெரியும் சார். என்னா இப்படி கேட்டுட்டீங்க. நான் மதுரைக்காரன் சார்... எல்லா வழியும் நல்லாத் தெரியும்.

இப்படி சொல்லி தம்பி மதுரையை ஒரு இரண்டு சுத்து வந்தார். நானும் ரொம்ப சாதுவாக, தம்பி மீனாட்சி அம்மன் கோயிலை இப்படி எல்லம் சுத்தக்கூடாது... கோயில் உள்ள போய், நடந்துதான் சுத்தணும் அப்படின்னு சொன்னேன். தம்பி படு ஷார்ப். சார் கோச்சுகாதீங்க, அப்படின்னு சொல்லிட்டு, ஒரு ஓரமா வண்டியை நிறுத்திபிட்டு, அங்கன யார் கிட்டயோ, அண்ணே, கோயமுத்தூர் வழி எதுண்ணேன்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தார். திடீரென லவுட் ஸ்பீக்கரில், டொயோட்டா இன்னோவா 4511 வண்டியை எடுங்க அப்படின்னு. ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சு திரும்பவும் அதே மாதிரி ஒரு லவுட் ஸ்பீக்கரில் ஒரு குரல். நமக்கு சொந்த வண்டியா இருந்தாவண்டி நம்பர் ஞாபகம் இருக்கும். இதுவோ வாடகை வண்டி. ஓட்டுனர் மட்டும் எனக்கு நம்பகமான, 10 வருடங்களுக்கு மேல் பழக்கமான ஓட்டுனர். அவருக்கும் வண்டி நம்பர் ஞாபகம் இல்லை போலிருக்கு. அடுத்து வந்த லவுட் ஸ்பீக்கரில் வந்த குரல், யோவ் வெள்ளச் சட்ட, 4511 பக்கத்துல நிக்கற, வண்டி எடுகங்ய்யா.. ஒருத்தன் இங்க கத்திகிட்டு இருக்கிறது காதுல விழல.. அதுல பாருங்க அன்னிக்கு நானும் வெள்ளைச் சட்டை, ஓட்டுனரும் வெள்ளைச் சட்டை போட்டுகிட்டு இருந்தோம்.

சரி அப்படி, இப்படின்னு வண்டிய எடுத்து, வழி விசாரிச்சுகிட்டு, கிளம்பியாச்சு. சிலர் பொள்ளாச்சி வழி என்றும், சிலர் கொடை ரோடு, ஓட்டன் சத்திரம் வழி என்றும் சொன்னார்கள். இந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம் என்று, நண்பர் வால்பையனுக்கு தொலைப்பேசி அழைத்து அவரிடம் வழி கேட்க, அவரும் ஒரு வழி சொன்னார். அவரிடமே வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் அவர்கள் தொலைப்பேசி நம்பர் இரண்டையும் வாங்கிக் கொண்டேன்.

பிறகு ஆரம்பிச்சது, அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களுக்கு... தொந்திரவு...

அண்ணே, கொடை ரோடு வந்தாச்சு.. இப்ப எந்த ரூட்ல வரணும். அண்ணே ஓட்டன் சத்திரம் வந்தாச்சு இப்ப எந்த ரூட்ல வரணும், வழில வரும் ஊர் பேர் எல்லாம் சொல்லி வழி கேட்டாச்சு. அவரும் வழி சொல்லி, சொல்லி சோர்ந்துப் போயிட்டார். கடைசியில் அண்ணே அலங்கார் கிராண்டேயில் ரூம் போட்டு இருக்கு இப்ப சூலூர் வந்தாச்சு எங்க திரும்பணும் அப்படின்னு கேட்டோம். ராமநாதபுரம் சிக்னலில் வலதுபுறம் என்று சொன்னார். நம்ம ஓட்டுனர் அதை எல்லாம் விட்டு விட்டு நேரா ரயில்வே ஸ்டேஷன் கிட்ட வந்துட்டார். அண்ணனை திரும்பவும் கூப்பிட்டு அண்ணே ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு, இப்ப எங்க திரும்பணும் அப்படின்னு கேட்டேன். அண்ணன், அய்யய்யோ ஏன் ஸ்டேஷனுக்கு வந்தீங்க.. சரி சரி பரவாயில்லை அப்படியே நேரா போங்க, ஒரு மேம்பாலம் வரும். அதுக்கு கீழால போயி ஒரு யூ டர்ன் எடுத்துகிட்டு நேரா போனா சிட்டி டவர் வரும். அதற்கு எதிர்த்தாற் போல் அலங்கார் கிராண்டே இருக்கு என்றார். ஒருவழியா அலங்கார் கிராண்ட் டே வந்து, வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன், சுரேஷ் குமார் அண்ணன், செல்வேந்திரன் அண்ணன் நால்வருக்கும் நாங்க தங்கியிருந்த ரூம் விவரத்தை சொன்னோம். அண்ணன்கள் நாலவரும் மாலை வருவதாக வாக்களித்தப் படி, முதலில்,வேலன் அண்ணாச்சி செல்வேந்திரன் அண்ணன் கூட வந்தார். பின்னர் சஞ்சய் அண்ணன் வந்தார். கடைசியாக சுரேஷ்குமார் அண்ணன் வந்தார்.

பின்னர் நால்வரும் பேச ஆரம்பித்தோம். வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களின் வியாபர நுணுக்கங்களைப் பற்றியும், அவரது தொழில் பற்றியும் பேச்சு போய்க்கொண்டு இருந்தது. அண்ணன் செல்வேந்திரன் அவரது வேலைப் பற்றியும், அது சம்பந்தமாகவும் உரையாடிக்கொண்டு இருந்தோம்.

அண்ணன் செல்வேந்திரன் அவர்கள் கஸ்டமர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதைப் பற்றி சொன்னார். ஒரு கஸ்டமர் நமது நல்ல சர்வீசை யாராவது இருவரிடம் தான் நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார். ஆனால் அதே கஸ்டமர் நமது மோசமான சர்வீசைப் பற்றி 50 பேரிடம் புகார் தெரிவிப்பார். அதனால் எந்த மாதிரியான கஸ்டமாராக இருந்தாலும் அவரை மதித்து, நல்ல சர்வீஸ் வழங்க வேண்டும். முடியாது என்பதைக்கூட நளினமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். அருமையான கருத்து. நன்றி செல்வேந்திரன்.

செல்வேந்திரன் அவர்களுக்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால், அவரால் எங்களுடன் அதிக நேரம் அமர்ந்து பேச இயலாமல் போய்விட்டது.

சஞ்சய் அண்ணன் அவர்கள் கூட பேச ஆரம்பித்தால், நமக்கெல்லாம் சிரித்து சிரித்து வயறு புண்ணாகிவிடும். அப்படி ஒரு பேச்சுத்திறன்.

தம்பி சுரேஷ் குமார்... லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் என்று சொல்லுவார். அருமையான தம்பி. என்னைப் பார்க்க வந்துவிட்டு, அவர் பேசிக் கொண்டு இருந்தது என்னவோ, கேமிராவைப் பற்றியும், அதனுடைய டெக்னிகள் டீடெயில் பற்றியும். என்னிடம் கேமிரா பற்றி பேசுவது என்பது, குருடனை ராஜபார்வை பார் என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது.

பின்னர் நாங்க அனைவரும் இரவு உணவுக்காக அங்கே இருந்த உணவகத்திற்குப் போனோம். கவனிப்பு முதலில் சரியாக நடக்கவில்லை. எப்போதும் போல், அவர்களிடம் சற்று கோபமும், கனிவும் கலந்து பேசி, சரி செய்ய வைத்தோம். உணவுத்தரம் நன்றாக இருந்தது.

மிக முக்கியமாக நான் உணவுத் தரத்திற்கு எனக்கு உள்ள அளவு கோல், அடுத்த நாள் என் வயிற்றையோ, உடல் நலத்தையோ பாதிக்காத உணவு நல்ல தரமான உணவு என்பதுதான்.

ஜுலை 3, 2009.

காலை நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக பொள்ளாச்சி போய் வந்தோம். இன்று அரவிந்தனின் பிறந்த நாள். காலையிலேயே நண்பர்கள் பலரும் தொலைப் பேசியில் பேசி அரவிந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மதியம் ஒரு நண்பரை பார்ப்பதற்கு சென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம். அண்ணன் வால்பையன் அவர்கள் ஈரோட்டில் இருந்து எங்களைப் பார்ப்பதற்காக வந்து கொண்டு இருக்கின்றேன் என்று தொலைப் பேசியில் கூறினார். அண்ணன் சுரேஷும் மாலை 6 மணிக்கு வருவதாகக் கூறினார்.

அண்ணன் வால் பையன் சரியாக 6 மணிக்கு வந்தார். அவருடன் நிறையப் பேசிக் கொண்டு இருந்த போது, அரவிந்திற்கு பர்த்டே கேக் வாங்கிக் கொண்டு அண்ணன் சுரேஷ்குமார் வந்தார்.

சுரேஷ் குமாரும், வால்பையன் அறிமுகம் முடிந்த பின், நெடு நேரம், தனிப்பட்ட முறையில் உறையாடிக் கொண்டு இருந்தோம்.

பின்னர், சுரேஷ் குமார் அவர்கள் வாங்கி வந்து இருந்த கேக்கை வெட்டி, அரவிந்தனின் பிறந்த நாள் அமர்க்களமாகக் கொண்டாடப் பட்டது.

இரவு 8 மணியளவில் நெடுநாள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் வருவதாகச் சொல்லியிருந்ததால், வால்பையன் அவர்களுடன் உணவருந்த செல்ல இயலவில்லை. சாரி வால் பையன் அண்ணே.


புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு



வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன்


சஞ்சய் அண்ணனும், நானும்.


வடகரை வேலன் அண்ணாச்சி


அரவிந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்க்காக சுரேஷ் குமார் அண்ணன் வாங்கிவந்த கேக்


அண்ணன் சுரேஷ்குமார், அண்ணன் வால்ஸ் & me


பிரபல பதிவர் அண்ணன் வால் பையனுடன்..


ஜூலை 4 அன்று அங்கிருந்து கிளம்பி குன்னூர் போய்விட்டு ஜூலை 6 ம் தேதி அன்று திருப்பூரில் பதிவர்களுடன் லஞ்ச் ஆன் மீட்டிங்.... இது பற்றி விவரமாம அடுத்தப் இடுகையில்..



அது வரை ... தொடரும்

படங்கள் உதவி - அண்ணன் சுரேஷ் குமார்...
என்னோட காமிராவில் படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழவேயில்லை. அதனால் படங்கள் கொடுத்து உதவிய அண்ணன் சுரேஷ் குமாருக்கு நன்றிகள் பல.

Wednesday, September 16, 2009

பாசப் பறவைகள் பாகம் - 5

ஜூன் 28, 2009

சென்னைப் பதிவர் சந்திப்பு - மாலை 6.00 மணி.

பதிவர் சந்திப்பிற்கான நேரம் மாலை 5.30 மணி தி.நகர் நடேசன் பூங்கா என்று சொல்லியிருந்தார்கள். நான் அங்கு போகும் போதே மணி 6.00 ஆகிவிட்டது. (எப்போதுதான் சொன்ன நேரத்திற்கு போவோம்ன்னு கேட்கீறங்களா... அதுவும் சரிதான்..).

அங்கு பல பதிவர்களை ஒரு சேர சந்தித்ததில் ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். எனக்கு ஐயா டோண்டு ராகவன் மற்றும் தண்டோரா இருவருக்கும் மத்தியில் அமர இடம் கிடைத்தது.

அங்கு சந்தித்த பதிவர்கள்

டோண்டு ராகவன், வண்ணத்துப்பூச்சியார், தண்டோரா, கேபிள் சங்கர், நர்சிம், லக்கிலுக், அதிஷா, பைத்தியக்காரன், இணைய நண்பர்களுக்காக ஸ்ரீ, வெண்பூ, இலக்கியா குடந்தை அன்புமணி, பினாத்தல் சுரேஷ், மருத்துவர் ப்ரூனோ, ஜாக்கி சேகர், அக்கினி பார்வை, ஆசிஃப் மீரான்.

என் நினைவில் இருந்து இந்த இடுகையை எழுதுவதால், சிலரது பேர் விட்டுப் போயிருக்கலாம். அவர்கள் மன்னிக்கவும்.

பதிவர் சந்திப்புக்கு முன்பே தண்டோரா அறிமுகமாகியிருந்ததால், ஐயா டோண்டு ராகவன் அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். நெடு நாள் பழகியவர் போல் ரொம்ப நன்றாகப் பேசிக் கொண்டு இருந்தார். நான் சென்றபிறகும் பல பதிவர்கள் வந்ததால், எல்லோரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம்.

அண்ணன் ஆசிப் மீரான் அவர்களை, துபையில் சந்தித்து இருக்க வேண்டியது, இங்கு அவரை சந்தித்து சந்தோஷமாக இருந்தது. பல பதிவர்களும் பல விசயங்களைப் பற்றி பேசினார்கள். நான் பதிவர் சந்திப்புக்கு புதியவன் என்பதால் மௌனமாக இருந்தேன்.

சந்திப்பு முடிந்ததும், தேனீர் அருந்த சென்ற போது, மருத்துவர் புருனோ அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. மிக அழகாக, நேர்த்தியாக பேசுகின்றார். தன்னுடைய கருத்துகளில் அவருக்கு உள்ள ஆழ்ந்த அறிவு என்னை மலைக்க வைத்தது. எந்த விசயத்தைய்ம் மேலோட்டமாக பார்க்காமல் ஆழ்ந்து அறிந்து அதைப் புரிந்து கொள்ளும் அவரது பண்புக்கு தலை வணங்குகிறேன். சில நிமிடங்கள் பேசினாலும், அறிவுப் பூர்வமான நண்பருடன் பேசியது பிடித்து இருந்தது.

அதன் பின் ஐயா டோண்டு ராகவன், தண்டோரா, கோபிளார் மற்றும் நண்பர்கள் சிலருடன் சிற்றுண்டி அருந்த சென்றோம். கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

அங்குதான் திரைப்படத்துறையில் தண்டோரா, கேபிளார் அவர்களின் ஆழ்ந்த அறிவு புரிந்தது. சில படங்களின் காட்சிகளை அவர்கள் விவரித்த அழகு, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் எல்லாம் படம் பார்ப்பதே வேஸ்ட். உதாரணத்துக்கு ஒன்று, கற்பகம் திரைப்படத்தில், மன்னவனே அழலாமா.. பாட்டு எடுத்த விதம், அந்த கேமிரா கோணம், எடிட்டிங் பற்றி எல்லாம் இருவரும் பேசிய பேச்சு இன்றும் மறக்கவில்லை.

ஐயா ராகவன் அவர்கள் எந்த விசயத்தைப் பற்றி பேசினாலும், அவரது அனுபவம் புரிந்தது. அது அரசியல், குடும்பம், வேலை, செக்ஸ் ஜோக் எதுவாக இருந்தலும் ஐயா ராகவன் அவர்கள் ராகவன் தான். அற்புதமான மனிதர். அதன் பிறகு தனிப்பட்ட முறையில் சந்தித்தப் போதும், தொலைப் பேசியில் உரையாடிய போதும், அவரின் மிக உயர்ந்த பண்பு புரிந்தது.

ஜூன் 30, 2009 & ஜுலை 1, 2009 - மதுரை பதிவர் சந்திப்பு

ஜுன் 30, 2009 - காலை 7.00 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி, வழியில் சில கோயில்களில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, மதுரையை பார்க் ப்ளாசா ஹோட்டலை அடையும் போது மணி 3.00. அங்கிருந்து நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு தொலைப் பேசியில் உரையாடிய போது, அண்ணே உங்களை சரியாக 6.00 மணிக்கு வந்துச் சந்திக்கின்றேன் என்றார்.

சரியாக மாலை 6.00 மணிக்கு நண்பர் ஸ்ரீதர் அவர்கள் கூட எங்களை வந்துப்பார்த்தார். கிட்டதட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக எங்களுடன் பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும். கல்லூரிக்குப் போய்விட்டு, பின் எங்களுடன் வந்து பேசிக் கொண்டு இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. பின் மறு நாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்னறனர்.

ஜுலை 1, 2009 - மாலை 6.30 மணியளவில், கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீதர், தேனி சுந்தர், சீனா ஐயா, தருமி ஐயா ஐவரும் ரூமுக்கு வந்திருந்தனர். மதுரைக்காரவுகளே பாசக்காரவுகத்தான். சும்மா சொல்லக்கூடாது, அவங்க பேச்சு, சிரிச்சு சிரிச்சு நேரம் போனதே தெரியவில்லை. அதிலும் தங்ஸ்க்கு மதுரை (சோழவந்தான்) சொந்த ஊர் என்ற தெரிந்தபின், காண்பித்த பாசம் இருக்கின்றதே, அளவிட இயலாதது. பின்னர் அனைவரும் இரவு விருந்துக்காக நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே, roof top Garden க்குச் சென்ன்று உணவு அருந்தினோம்.

மதுரை பார்க் ப்ளாசா ஹோட்டல் பற்றி இந்த இடத்தில் அவசியம் சொல்லியாக வேண்டும். உணவு நன்றாக இருந்தது. பரிமாறப் பட்டதும், அதை செய்தவிதமும் மிக அழகு.

படங்களில் உள்ளவர்களை உங்களுக்கேத் தெரியும் என்பதால், பெயர்கள் போடப்படவில்லை.

இந்தச் சந்திப்புக்கு அவசியம் வருகின்றேன் என்று மருத்துவர் தேவா அவர்கள் சொல்லியிருந்தார். ஆனால் தவிர்க்க இயலாத வேலை வந்துவிட்டதால் வர இயலவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். புரிந்து கொள்கின்றேன் மருத்துவரே... அடுத்த முறை இந்தியா வரும் போது அவசியம் சந்திக்கலாம்.










ஜூலை 2, 2009 ...

காலை நாங்கள் அனைவரும் கோவைச் சொல்ல கிளம்பிக் கொண்டு இருந்தோம். நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் வேகமாக வந்து அண்ணே இந்தாங்க என்று ஒரு பார்சல் கொடுத்தார். என்னங்க இது என்றால், இல்லை அண்ணே, இது தாமரை இலை அல்வா என்று நேற்று சொன்னீங்களே, அதுதான் வாங்கி கொடுத்து இருக்கின்றேன். இப்ப அவசரமாக கல்லூரி போக வேண்டும். பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பிவிட்டார்.

மதுரையில் இருந்து கிளம்பி, தம்பி வால்பையனை அழைத்து, வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் இருவரது தொலைப் பேசி நம்பர்களையும் வாங்கி, தொலைபேசியில் கொடுத்த தொல்லைகள் பற்றியும், அவர்களது பாச மழையில் நனைந்தது பற்றியும் அடுத்த பாகத்தில்...

தொடரும்....

டிஸ்கி : இந்த தொடர் எழுதுவது பெரும்பாலும் என்னுடைய ஞாபகசக்தியில் இருந்துதான். அதனால் சிலருடைய பெயர்கள் (அ) செய்திகள் விடுபட்டு இருக்கலாம். நண்பர்கள் தெரிவித்தால் அதை இதனுடன் சேர்த்துக் கொள்ளுகின்றேன்.


Sunday, August 30, 2009

பாசப் பறவைகள் - பாகம் 4

ஜுன் 25, 2009

மாலை நேரம் அண்ணன் கேபிளாரை அழைத்தேன். அண்ணன் அப்போ ரொம்ப பிசியா கொடைக்கானலில் டிஸ்கஷனில் இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவேன் என்றும் பின்னர் அழைப்பதாகவும் சொன்னார். சற்று நேரத்திற்கெல்லாம் அண்ணன் தண்டோரா அழைத்தார். நலம் விசாரித்தார். ஜூன் 29, 2009 அன்று பதிவர் சந்திப்பு நடேசன் பூங்காவில் இருப்பதாகவும் அவசியம் வரவேண்டும் என்றும் அழைத்தார். அதற்கு முன்பாக சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நிச்சயம் சந்திக்கலாம் என்று கூறி கேபிள் அண்ணனும் வந்துவிடட்டும் என்றும் கூறினேன்.

அன்று மாலையே அண்ணன் இலக்கியா குடந்தை அன்புமணி அவர்களையும் அழைத்து இருந்தேன். அவர் நிச்சயம் மறு நாள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்.

ஜூன் 26, 2009

அண்ணன் இலக்கியா அன்பு மணி மாலை 6.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அவர் கூட பல விசயங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். குறிப்பாக குடந்தை யில் வாழ்ந்த நாட்களைப் பற்றியும், ஊரைப்பற்றியும், துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும் பேசினோம். நான் பதிவர் சந்திப்பிற்கு அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்திச் சொன்னார். பதிவர் சந்திப்பில் அண்ணன் உண்மைத் தமிழன் வருவார் என எதிர்பார்த்து இருப்பதாகவும், அவர் வந்தால் அவரிடம் சில கேள்விகள் (முக்கியமாக கவிதை என்று சொல்லி ஒரு இடுகைப் போட்டாரே அதைப் பற்றி - அதைப் படிக்க இங்க சொடுக்கவும்) கேட்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அதை அண்ணன் இலக்கியா ஒரு பதிவாகவே போட்டுவிட (அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்), அண்ணன் உண்மைத் தமிழன் பதிவர் சந்திப்பில் இருந்து அப்ஸ்காண்ட்.

பெ....ரி...ய பதிவாக எழுதி தள்ளிய அண்ணன் உண்மைத் தமிழன் அவர்கள், நேற்று மட்டும் கிட்டதட்ட 16 இடுகைகள் எழுதி டரியலாக்கிவிட்டார். அண்ணே மத்தவங்க பதிவையும் நாங்க எல்லாம் படிக்கணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் போடுங்கண்ணே... தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போடணும், பின்னூட்டம் போடணும், நாங்களும் இடுகை எழுதணும் அண்ணே... கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க...

நண்பர் இலக்கியா அவர்களை அழைத்தது ஞாபகம் இல்லாமல் எனது நண்பர் மணி அவர்களுடன் இரவு உணவுக்காக வெளியில் செல்வதாக சொல்லிவிட்டேன். அதனால் அவர்களை பார்த்து பின்னர் இரவு உணவுக்கு அவருடன் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் இருவரும் கிளம்பி நண்பர் மணி அவர்களைப் பார்க்க போனோம்.

பின்னர் அண்ணன் குடந்தை அன்புமணி, அவர்கள் DMS அருகில் இறங்கி, வேறு சென்றார்.

ஜூன் 27, 2009.

அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா இருவரையும் சந்திக்கலாம் என்று அண்ணன் கேபிளாருக்கு தொலைப்பேசினேன். அவரும் அண்ணே சைதாப்பேட்டை வந்திடுங்க அண்ணன் தண்டோரா அலுவகத்தில் சந்திக்கலாம் என்றும் சொன்னார்.

சரி என்று சைதாப்பேட்டைக்கு வந்து அவருடன் அண்ணன் தண்டோரா அலுவலகத்தில் சந்திக்கப் போனப்போது அங்கு அண்ணன் வண்ணத்துப்பூச்சியார் சூர்யா அவர்கள் இருந்தார்.

மிக்க சந்தோஷமாக இருந்தது. முதன் முதலாக இவர்களைப் பார்த்தப் போதும், அது முதல் சந்திப்பு மாதிரியே இல்லை. நெடு நாள் பழகிய நட்பு மாதிரி இருந்தது. அண்ணன்கள் கேபிளாரும், தண்டோராவும் வாங்கிக் கொடுத்த சாத்துக்குடி ஜூசுக்கு ஒரு பெரிய “”. அன்று பல் மருத்துவர் அவர்களின் அப்பாயின்மெண்ட் இருந்ததால், நெடு நேரம் அவர்களுடன் செலவழிக்க முடியவில்லை.

இதற்கு பிறகு இரண்டு / மூன்று முறை அண்ணன் கேபிளார், அண்ணன் தண்டோரா இருவரையும் சந்தித்தேன்.

அண்ணன் ச்சின்னப்பையன் அவர்கள் இந்தியா வந்தபோது அவருடன் அண்ணன் தண்டோரா அலுவலகத்தில் வைத்து சந்தித்தோம்.

அண்ணன் கேபிளாரிடம், ஒரு விடியோ காசெட் சரியில்லை எனவும், அதை டிவிடி யாக மாற்ற உதவிச் செய்ய இயலுமா என்றுக் கேட்டேன். அண்ணன் கேபிளார் தன்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சென்னை ரிச்சி தெருவில் உள்ள பல கடைகளில் ஏறி இறங்கி, கடைசியாக ராயப்பேட்டையில் உள்ள ஸ்டாலின்ஸ் என்ற இடத்தில் கொடுத்து அதை டிவிடியாக மாற்றிக் கொடுத்தார். விடியோ காசெட் மாற்றுவதில் என்ன கஷ்டம் என்று நீங்க நினைப்பது எனக்குப் புரிகின்றது. அது Sony Hi8 காசெட். அந்த காசெட் சரியாக வேலைச் செய்யாமல், எங்கேயோ சிக்கிக் கொண்டு, விடியோ காமில் போட்டால் ஓடவேயில்லை. அதை நானும் எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. அந்த காசெட்டில் அப்படி என்னதான் இருக்கு என்றால், என் மகன் அரவிந்த் சிறுவனாக இருந்த போது அடித்த லூட்டிகள், நடந்தது, ஓடியது எல்லாம் அந்த காசெட்டில்தான் இருந்தது. இந்த உதவி செய்த அண்ணன் கேபிளாருக்கு நன்றிகள் பல. உண்மையாகச் சொல்லுகின்றேன் அன்று அவர் எனக்காக அலைந்ததும், நண்பர்கள் பலரை அழைத்து தொலைப் பேசியதும், பின்னர் ஏக்னாத் போய் முயற்சி செய்த்தும் மறக்க இயலாதது. நன்றி கேபிள்அண்ணே... கேபிள் அண்ணன் கிட்ட கேளுங்க, நிச்சயம் சரி செஞ்சு கொடுப்பார் என்று சொன்ன புதுகை அப்துல்லா அண்ணனுக்கும் நன்றி.


அண்ணன் கேபிளாரும், அண்ணன் தண்டோராவும் நான் நைஜிரியா திரும்பும் முன் என்னை வீட்டில் வந்து சந்தித்தனர். அப்போது இணைய நண்பர்களுக்காக பதிவர் ஸ்ரீ... அவர்களும் வந்து இருந்தார்.

அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களும் வீட்டிற்கு வந்து இருந்தார். மகன் அரவிந்து கூட அவரின் படமும் .. அரவிந்து கூட அப்துல்லா அண்ணன் பேசிகிட்டு இருந்தார். என் கூட பேசியவை ரொம்ப குறைவு. அவர்கள் இருவரும் பேசியதை நம் இடுகையில் போடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அதைப் பற்றி எதுவும் இந்த இடுகையில் கிடையாது. (உண்மையைச் சொல்லப் போனால் இருவரும் என்னைப் பேசவே விடவில்லை..)

அண்ணன் கேபிளார் அவர்களை படம் எதுவும் எடுக்கவில்லை. எப்போதும் மனதிலேயே இருப்பதால் படங்கள் எடுக்கவில்லை.






அண்ணன் புதுகை அப்துல்லா, அரவிந்த்..



அண்ணன் தண்டோரா (இந்த படம் எடுத்தது அண்ணன் கேபிளார்)



இணைய நண்பர்களுக்காக .... ஸ்ரீ.. (இந்தப் படம் எடுத்ததும் அண்ணன் கேபிளார்தான்...)


அடுத்து

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு மற்றும் மதுரைப் பதிவர்கள சந்திப்பு பற்றி...

தொடரும்

Thursday, August 20, 2009

பாசப் பறவைகள் பாகம் - 3 - பொன் மாலைப் பொழுது சந்திப்பு

ஜூன் 24, 2009

சிலப் பதிவர்களைச் சந்திக்கலாம் என்று எண்ணி, என்னிடம் கைவசம் இருந்த தொலைப் பேசி எண்களை வைத்து பதிவர் நண்பர்களை ஜூன் 24 காலையில் இருந்து கூப்பிட ஆரம்பித்தேன். அப்போது தங்கச்சி ரம்யா இன்று டின்னர் சாப்பிட எதாவது ஹோட்டல் போகலாம் என்று சொன்னார்கள். தங்கச்சி ரம்யாவிடம் எந்த ஹோட்டல் போகலாம் என்று விசாரித்து, அவர்கள் சொன்ன 4 ஹோட்டல் நிராகரித்துப் பின் T. Nagar GRT Grand days - ல் சந்திக்கலாம் என்று முடிவு செய்து, மாலை 6.00க்கு பார்க்கலாம் என்று நேரத்தை முடிவுச் செய்தோம்.

பின் GRT Grand Days - தொலைப்பேசியில் அழைத்து, மொத்தம் 10 பேருக்கான இடத்தை ரிசர்வ் செய்தோம்.

நான் வீட்டில் இருந்து மாலை 5.30 க்கு கிளம்பி, ஆட்டோ பிடித்து, பின் தங்கச்சி ரம்யாவை கூப்பிட்டேன். அண்ணே கிளம்பிட்டோம், வந்துகிட்டு இருக்கோம், டிராபிக் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு என்றார்கள். வரும் போது ரசனைக்காரி, நாமக்கல் சிபி இருவரையும் அழைத்துக் கொண்டு வருவதாகவும் கூறினார்கள்.

அடுத்து தம்பி செய்யதுவை கூப்பிட்டேன், அவர் அண்ணன் ஜீவன் கூட வருவதாகவும், அவரும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டதாகவும் சொன்னார்.

அடுத்து அண்ணன் புதுகை அப்துல்லா, வருவேன் ஆனா வரமாட்டேன் என்று சொன்னார். அண்ணே எப்படியாவது வந்திருங்க அண்ணே என்று சொன்னதற்காக, எப்படியோ, அலுவலகத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, வந்திட்டார்.

ஆதிமூலகிருஷ்ணன், அவர்கள் 6 மணிக்கு சரியாக வந்துவிட்டு, லாபியில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

நான் 6.15 க்குப் போய் அண்ணன் ஆதி அவர்கள் கூட பேசிகிட்டு, (எங்களுக்கு தெரிஞ்ச சிக்ஸ் சிக்மா / குவாலிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் பற்றி அவரிடம் கொஞ்சம் போட்டுப் பார்த்தோமில்ல..) இருக்கும் போது அண்ணன் புதுகை அப்துல்லா வந்தார்...

சிறுது நேரத்திற்கொல்லாம் தங்கச்சி ரம்யா, தங்கச்சி ரசனைக்காரி, அண்ணன் நாமக்கல் சிபி, நண்பர் சுரேஷ், கலை அக்கா எல்லோரும் வந்தனர்.

இன்னும் சிறிது நேரம் பொருத்து, சென்னை டிராப்பிக்கில் நொந்து நூடுல்ஸ் ஆகி அண்ணன் ஜீவனும், தம்பி செய்யதுவும் வந்து சேர்ந்தனர்.

அனைவரும் 6.30க்கு ஆஜர்...

GRT Grand Days ஹோட்டலில் டின்னர் 7.30 க்குத்தான் ஆரம்பிக்குமாம்.

எல்லோரும் சேர்ந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சோம்... யாரும் மாட்டினாலும் மாட்டிகிட்டவரைஅனைவரும் சேர்ந்து கும்மி அடிச்சு தீர்த்தோம்...

அப்போது தங்கச்சி ரம்யா அவர்கள், சிபி அவர்கள் வண்டியில் வரும்போது, ரசனைக்காரி ராஜேஸ்வரியிடம், நான் தான் கோவி கண்ணன் என்று சொல்லுகின்றார். அதை இவங்களும் நம்பிகிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. அப்ப ஆரம்பிச்ச கும்மி டின்னர் முடியரவரைக்கும், போயிகிட்டு இருந்தது ...

அன்றுச் சந்தித்த பதிவர்கள்...

அண்ணன் புதுகை அப்துல்லா அண்ணன்
அண்ணன் ஆதிமூல கிருஷ்ணன் (எ) தாமிரா
அண்ணன் நாமக்கல் சிபி
அண்ணன் ஜீவன்
தம்பி அ.மு. செய்யது
தங்கச்சி ரம்யா
தங்கச்சி ரசனைக்காரி
நண்பர் (சித்தர்) சுரேஷ்
கலை அக்கா



தம்பிக் கலையரசன் வாங்கிக் கொடுத்த காமிராவில் எடுக்கப்பட்ட முதல் படம்.. அண்ணன் புதுகை அப்துல்லா..



தம்பி அ.மு. செய்யது


அண்ணன் புதுகை அப்துல்லா


அண்ணன் அப்துல்லா, அண்ணன் ஆதி, அண்ணன் சிபி, அண்ணன் ஜீவன், நண்பர் சுரேஷ்..

டின்னர் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. கடைசியில் நண்பர்கள் சிலர் காப்பி வேண்டும் என்றுச் சொல்லவும், அங்கு வந்த பேரரிடம், நாங்க இரண்டு காப்பி கொண்டு வாங்க என்றுச் சொன்னோம். இதோ கொண்டு வருகின்றோம் என்று சொன்னவர், 10 நிமிடம் ஆகியும் கொண்டு வரவில்லை.

அதன் பின் அவருக்கு மேல் உள்ள சூப்பர்வைசரிடம் சொன்னோம். இதோ என்று சொல்லிவிட்டு போனவர் தான் அப்புறம் ஆள் மிஸ்ஸிங்.

இப்படியாக ஒரு 25 நிமிஷம் போனவுடன், நான் நேராக மேலாளரிடம் சென்றேன். பின் வருமாறு அவரிடம் சொன்னேன்...

ஐயா, இங்கு நாங்கள் அனைவரும் நன்றாகச் சாப்பிட்டோம். மிக நன்றாக இருந்தது. கவனிப்பும் மிக அருமையாக இருந்தது. ஆனால் இனிமேல் இந்த ஹோட்டலுக்கு வருவதாக இல்லை. நீங்க பணம் கொடுத்து வாங்கன்னு கூப்பிட்டாக் கூட வருவதாக இல்லை. ஒரு காப்பிக்காக 25 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்று இங்குத்தான் பார்த்தேன். அதுவும் இரண்டு பேரிடம் கேட்டும் கிடைக்கவில்லை அதைவிட வெட்கக் கேடான விசயம் வேறில்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

எவ்வளவு கலகலப்பாக போச்சோ, அதை அத்தனையும் ஒரு நிமிடத்தில் போக்கடித்துவிட்டனர் GRT Grand Days.

இது மாதிரி நான் சென்ற இடங்களில் நடந்தவைகள் சில... அவற்றை ஒரு தனி
இடுகையாகப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்...

அன்று எனது அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

அதிலும் அண்ணன் அப்துல்லாவுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துக் கொண்டு இருந்தது, அண்ணன் ஆதி வீடு மாற்றிக் கொண்டு இருந்தார், அண்ணன் நாமக்கல் சிபி அவர்களுக்கும், அண்ணன் ஜீவன், தங்கச்சி ரம்யா, தங்கச்சி ரஜேஸ்வரி அவர்கள் அனைவரும் அலுவலகத்திற்குப் போய்விட்டு எனக்காக வந்தது மிக நெகழிச்சியாக இருந்தது.

ஹோட்டலில் இருந்து வெளியே வந்தவுடன், ரம்யா அவர்களது காரில் என்னை திருவல்லிக்கேணியில் கொண்டு விட்டார்.

அடுத்து பிரபல பதிவர்கள் குடந்தை அன்புமணி, கேபிள் சங்கர், தண்டோரா மணி, வண்ணத்துப் பூச்சியார் சுரேஷ் அவர்களை சந்தித்ததைப் பற்றியும், சென்னைப் பதிவர் சந்திப்பைப் பற்றியும் .... அடுத்த இடுகையில் பார்க்கலாமே...


தொடரும்.....

Saturday, August 15, 2009

பாசப் பறவைகள் பாகம் - 2

ஜூன் 21 மாலை 6 மணி...

சரியாக மாலை 6.15... தம்பி சரவணன், தம்பி கலையரசன், அண்ணன் சுந்தராமன் மூவரும் வருகை தந்தனர்.

வரும் போதே கையில் இட்லி,வடை இரண்டையும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டனர். உபயம் அண்ணன் சுந்தர் ராமன் அவர்கள்.

சிறிது நேரம் அரவிந்த் கூட உலக விவகாரங்களை அலசி கொண்டு, கிரிகெட் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.

பின்னர் நண்பர்களிடம் ஒரு கேமிராவும், சட்டையும் வாங்க வேண்டும் என்று சொன்னவுடன், அண்ணன் சுந்தர்ராமன் சாரதியாகவும், தம்பி சரவணன் வழி காட்டுபவராகவும், நான் துபை கட்டிடங்களைப் பாராக்குப் பார்ப்பவனாகவும், இப்படியாக ஒரு கடைக்கு அழைத்துச் சென்றனர்.

காமிரா கடைக்குப் போனதும், கலையரசனிடம், தம்பி நம்ப பட்ஜெட் 2500 திராம்ஸ் எந்த காமிரா நல்லா இருக்குமோ அதைப் பார்த்து வாங்கி கொடுங்க என்று சொன்னேன்.

உடனே, அண்ணன் ஜாக்கி சேகர் உபயோகப் படுத்திகின்ற மாதிரி ஒரு காமிராவைப் பார்த்தார். அண்ணே நீங்க ப்ரொபஷனல் போட்டோ கிராபரா, இல்லை அமெச்சூரா (இந்த மூஞ்சியைப் பார்த்தவுடன் ப்ரொபஷனல் போட்டோகிராபரா என்று கேட்க நினைத்தாரே அதுவே பெரிய விசயம்தான்) என்றார். போட்டோகிராபிக்கும் நமக்கு பல காத தூரம் தம்பி, அதனால் எது நல்ல காமிராவோ அதை வாங்கிக் கொடுங்க, ரொம்ப கேள்விகேட்காதீங்க அப்படின்னு சொன்னனேன்.

அண்ணே அப்படின்னா இந்த காமிரா உங்களுக்கு வேண்டாம். சாதாரண காமிரா போதும், அப்படின்னு சொல்லிட்டி, Sony, Canon, இப்படி பல காமிராவை பார்த்து, அந்த சேல்ஸ் மேனை ஒரு வழியாக்கி, அப்புறம் எல்லோரும் கலந்து பேசி, Canon Digitial IXUS 951S என்ற மாடலை 1000 திராம்ஸ்க்கு வாங்கி கொடுத்தார். அண்ணே மீதி பணத்துக்கு ஒரு விடியோ காம் எடுத்துகுங்க அப்படின்னு சொல்லி, Sony வாங்கலாமா, JVC வாங்கலாமா அப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, JVC வாங்குவது என்று முடிவு செஞ்சு, அதையும் வாங்கிகிட்டோம்.

கூட வந்து, ஒத்துழைத்து, ஒரு நல்ல காமிரா வாங்கிக் கொடுத்த தம்பி கலையரசனுக்கு நன்றிகள் பல. காமிராவைப் பார்த்த பலரும் (விசயம் அறிந்தவர்கள்) ரொம்ப நல்லா இருக்கு, சூப்பர் காமிரா என்று சொன்னார்கள். அந்த காமிராவில் எடுத்த படங்கள் அடுத்த இடுகைகளில் வரும்...

இந்த காமிரா வாங்கிக் கொண்டு இருக்கும் போதே அண்ணன் ஆசாத், தம்பிகள் கண்ணா, நாகா மூவரும் தங்கள் வருகையை கலைய்ரசனையும், சரவணனையும் தொலைப் பேசியில் அழைத்து சொல்லிவிட்டனர்.

அதனால் உடனடியாக ஹோட்டலுக்கு திரும்பினோம்.












பதிவர் சந்திப்பில் படங்கள் இல்லாமல் இருக்க கூடாதல்லவா... அதனால் தம்பி கலையரசன், நாகா பதிவில் இருந்து சுட்ட படங்கள்... (கலை & நாகா பர்மிஷன் இல்லாமல் போட்டதற்கு- மன்னிக்கவும்....)


அறைக்கு திரும்பியதும், பதிவர்கள் நாகா, ஆசாத், மற்றும் ப்ரதீப் வந்து அரவிந்த், தங்கமணி கூட பேசிகிட்டு இருந்தார்கள்.

நாங்க பேசிக் கொண்டு இருந்த போது தம்பி அபு அஃப்சர் வந்து கலந்து கொண்டார். துபாயில் இருந்து தம்பி ஜமால் கூட தொலைப் பேசியில் உரையாடிக் கொண்டு இருந்த போது, அண்ணே அரவிந்துக்கு என்னப் பிடிக்கும் என்று கேட்டார். நானும் சாதாரணமாக அரவிந்திற்கு கம்பூயட்டர் கேம்ஸ் பிடிக்கும் என்று சொன்னேன். அவர் தம்பி அபுகிட்ட சொல்ல, வரும்போதே, கேம்ஸ் சிடியும், சாக்லெட்டும் வாங்கிவந்துவிட்டார். அரவிந்த் தினமும் தம்பி அபுவை நினைக்காத நாளில்லை. நன்றி அபு.

பின்னர் வந்து இணைந்துக் கொண்டவர் எனது 25 வருடகால நண்பர் திரு ஸ்ரீதர் அவர்கள். பார்த்து பல வருடங்கள் ஆன போதிலும், ஒரே ஒரு தொலைப் பேசி செய்ததற்கு, வந்து பார்த்தார்.

சட்டை வாங்கவில்லை என்று சொன்னதுமே கண்ணாவும், கலையரசனனும் இருவரும் சென்று வெள்ளைக் கலரில் ஒரு சட்டை வாங்கி வந்தனர். நன்றிகள் பல. பணம் வாங்க மறுத்துவிட்டனர் தம்பிகள்.

நண்பர்கள் பலரும் பேசியதில், பொதுவாக பேசப்பட்ட விசயங்கள் தான் அதிகமிருந்தன. நைஜிரியாவில் வெயில் எப்படி, என்ன என்ன தொலைக் காட்சிகள் தெரிகின்றன, உங்க கூட தமிழர்கள் வேலை செய்கின்றனரா, உருப்புடாதது அணிமா எப்படி இருக்கின்றார் என்பன போன்ற விசயங்கள்தான்.

மேலும் பேசிய விசயங்களில், நமது வலைப் பதிவைப் பாதுகாப்பது எப்படி, கும்மி அடிப்பது எப்படி, உங்களால எப்படி இவ்வளவு பின்னூட்டம் போட முடிகின்றது (இது பெரிய விசயமே இல்லை... இடுகை எதுவும் போடவில்லை என்றால், போடத் தெரியவில்லை என்றால் பின்னூட்டம்தான் போட முடியும் !!!!)

இப்படியாக பேசிக் கொண்டே இருக்கும் போது, எல்லோருக்கும் அண்ணன் சுந்தர் ராமன் அவர்கள் வாங்கி வந்திருந்த இட்லி, வடைக் கொடுக்கப்பட்டது.

நண்பர்கள் அனைவரும் விடைப் பெற முடிவு செய்த போது, அண்ணி சொன்ன வார்த்தைகள்...

“இந்த நட்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்”

பின்னர் என்னிடம் சொல்லியது..

“மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது. கூடப் பிறந்தவர்கள் மாதிரி எவ்வளவு அன்பா, பாசமா இருக்காங்க எல்லோரும்”

பின்னர் அனைவரும் 8.30 க்கு விடைப் பெற்றுச் சென்றனர்...

வேலை நாளாக இருந்தாலும், தங்கள் வேலைக்களை முடித்துவிட்டு என்னைச் சந்தித்துச் சென்ற நண்பர்கள்

சரவணன்
கலையரசன்
சுந்தர் ராமன்
நாகா
ஆசாத்
கண்ணா
அபு அஃப்சர்
ப்ரதீப்

உங்கள் அனைவரின் அன்புக்கும் பாசத்திற்கும் எங்கள் குடும்பத்தினரின் நன்றி, நன்றி, நன்றி.

எங்களுக்குத் தேவையான வண்டி 11.00 மணியளவில் வந்து துபை விமான நிலையம் வந்து, சென்னைக்கு ஜூன் 22, 2009 காலை 8.10 க்கு வந்துச் சேர்ந்தோம்...

ஓவர் டு சென்னை...

இந்தியாவில் பதிவர்களைச் சந்தித்ததுப் பற்றி...

அடுத்த பாகத்தில் பார்க்கலாமே..


தொடரும்...

Tuesday, August 11, 2009

பாசப் பறவைகள் - பாகம் 1

என்னுடைய விடுமுறையில் பல பதிவர்களையும் சந்தித்தேன். நண்பர்கள் பலரையும் சந்தித்தது மிக மிக சந்தோஷமாக இருக்கின்றது. அவர்களின் பாசம் அளவிட முடியாதாது.

நிறைய நண்பர்களைச் சந்தித்தாலும், பல நண்பர்களை சந்திக்கமுடியாமல் போனது மிக வருத்தமாகத்தான் இருக்கின்றது.

சந்தித்த நண்பர்களைப் பற்றியும் அவர்கள் எனக்கு உதவியதும் நான் பாச மழையில் நனைந்ததும் ...

ஜூன் 21, 2009 - காலை 7.30 மணி

இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பே, மெயில் மூலம் தம்பி சரவணன் (குசும்பன்), அண்ணே துபாய் வந்தவுடன் என்னை அழையுங்கள் என்றுச் சொல்லி அவரின் மொபைல், லேண்ட் லைன் நம்பர் இரண்டையும் கொடுத்து இருந்தார். அவரிடம் எனக்கு தேவையான உதவிகளைச் செய்யச் சொன்னவர் அன்புத்தம்பி அபி அப்பா.

இவரைத்தவிர தம்பி அபுவும் தன்னுடைய மொபைல், லேண்ட் லைன் நம்பர் இரண்டையும் கொடுத்து இருந்தார். ஆனால் அவர் அப்போது இந்தியா சென்று இருந்தார், நான் வருகின்றேன் என்ற காரணத்திற்காகவே அவசரம், அவசரமாக துபாய் திரும்பினார்.

துபாய் விமான நிலையத்தில் இறங்கி, குடியுரிமை பரிசோதனைகளை முடித்துவிட்டு, பின் அவர்கள் கொடுத்த வண்டியில் Pearl Residence ஐ அடையும் போது மணி காலை 9.30. சற்று இளைப்பாறிவிட்டு, தம்பி சரவணணை அழைத்தவுடன், அவர் கேட்ட முதல் கேள்வி அண்ணே ப்ரேக்பாஸ்ட் ஆச்சா என்று தான்.

இல்லை என்றவுடன், நான் வரும்போது இட்லி வாங்கி வருகின்றேன். அண்ணி தயிர் சாதம் வேண்டும் என்று சொன்னவுடன், அதையும் வாங்கி வருகின்றேன் என்றார். சரியாக 30 நிமிடத்தில் அங்கு இருப்பேன் என்றவர், 29 நிமிடத்தில் அங்கு இருந்தார். கையில் டிபனுடன்.

இதற்கிடையில் நான் தம்பி அபி அப்பா அவர்களை அழைத்தேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. அரவிந்த் கூட நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.. அரவிந்த்க்கு அவர் கூட பேசியதில் நிரம்ப சந்தோஷம்.

அண்ணி தங்க வளையல் வாங்கப் போகவேண்டும் என்றவுடன், அரவிந்தையும் கூட்டிக் கொண்டு, கோல்ட் சூக்கிற்கு உடனே அழைத்துச் சென்றார்.

இதற்கு இடையில் நண்பர்கள் அனைவரையும் அழைத்து, நான் வந்த விவரத்தை அவர்களுக்கு தெரிவித்துவிட்டு, அனைவரையும் மாலை 6 மணிக்கு Pearl Residence க்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அங்கு அண்ணி வளையல் வாங்கும் போது நடந்தவை உங்களுக்காக..

முதல் கடையில் :
சரவணன் : அண்ணி இங்கு தங்கம் நல்லா இருக்கும். எடைச் சரியாக இருக்கும்.
அண்ணி : வளையல் மாடல் காண்பிக்கச் சொல்லுங்க.
சரவணன் : எவ்வளவு பவுன் அண்ணி வாங்கப் போறீங்க..
அண்ணி : 4 பவுன்
சரவணன் : என்ன அண்ணி இது அண்ணன் பத்து பவுன் என்று சொல்லிகிட்டு இருக்கார் .. நீங்க 4 பவுன் என்று சொல்கின்றீர்கள்.
நான் மனதிற்குள் : (போட்டு கொடுக்கின்றாயா தம்பி..!! - நல்லாயிரு அப்பு)
அண்ணி : அவர் அப்படித்தான் சொல்லுவார்... 4 போதும்
ஆனால் அந்தக் கடையில் அண்ணிக்குப் பிடித்த டிசைன் கிடைக்கவில்லை.

அதனால் வேறு ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்...

சரவணன் : அண்ணி இங்கு குவாலிட்டி நல்லா இருக்கும் வாங்கிகுங்க.
அண்ணி அங்கு ஒரு டிசைனை செலக்ட் பண்ணி இது நல்லா இருக்கு வாங்கிகலாம் என்றுச் சொன்னாங்க.
சரவணன் : 6 வளையல் வாங்கிகுங்க
அண்ணி : 2 போதும்பா
சரவணன் : என்னங்க அண்ணி இது... அண்ணனுக்கு செலவு வைக்க மாட்டிங்க போலிருக்கு..
அண்ணி : வீட்டில் இருக்கும் போது போட்டுக் கொள்ளத்தானே ... இரண்டு வளையல் போதும்.
சரவணன் : இல்லீங்க அண்ணி, இன்னும் இரண்டு சேர்த்து 4 வளையலா வாங்குங்க...

இப்படியாக அவங்க பேசி 50 கிராமில் 4 வளையல் வாங்கிட்டாங்க.

பின்னர் தம்பி எங்களை ரூமில் இறக்கிவிட்டுவிட்டு, சாயங்காலம் 6 மணிக்குப் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டார்...

சரவணன் எங்களை இறக்கிவிட்டு சென்றபின் அண்ணி சொன்ன வார்த்தைகள்..
பாசத்தின் மறு பெயர் சரவணன்

சாயங்காலம் 6 மணி...

தொடரும்....