தம்பி ராஜ்குமார் (அறிவிழி) தீடிரென எழுதுவதை நிறுத்திவிட்டார்.
ஒரு அறிவிப்பு... இனிமேல் எழுதப் போவதில்லை. காரணம் கூறப்பட்ட பதிவைப் படிக்க இங்கு சொடுக்கவும்.
கூறப்பட்ட காரணமும் ”(தொடர்ந்து எழுத விருப்பம் இல்லாததால் விடைபெறுகிறேன்.............)” சரியில்லை. எனக்கு ஏற்புடையதாக இல்லை.
பதிவை நிறுத்தி 8 நாள் கழித்து ஏன் இந்த பதிவை இடுகின்றீர்கள் என நீங்கள் கேட்க நினைக்கலாம்.
நான் அவர் எப்படியும் திரும்பி வந்துவிடுவார் என்று நினைத்ததால், அதற்காக எந்த பதிவையும் இடாமல் இருந்தேன்.
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது..
நான் பார்த்தவரை, தம்பி ராஜ்குமாரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும். விசயங்களை அவர் அலசிய விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
பின்னூட்டங்களுக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்த போதும், கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு, சரியான பதில் அளிக்கத்தவறியதில்லை.
அவரின் பதிவு எனக்கு பிடித்து இருந்தது. உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகின்றேன்.
அவருக்கு என்று ஒரு வாசகர் வட்டம் உண்டு. அவர் கருத்தில் உடன் படாதவர்கள் கூட அவரின் பதிவைப் படிக்காமல் இருக்க மாட்டார்கள். (இல்லை என்றால் 1100 ஹிட்ஸ் ஒரு நாளைக்கு கிடைக்காது )
-----------------------------------------------------------------
-------- ---- -------- ---------------
1) அறிவிழி எடுத்துக்கொண்ட தலைப்புகள் எல்லாம் காரசாரமான விவாத்தத்திற்க்கு உட்பட்டது. ஆனால் எல்லா நியாமான கேள்விகளுக்கும், கடைசிவரை பதிலளித்தார். நான் அவரின் கருத்துகளுக்கு ஒத்துப்போகாமல், எதிர்த்து கேள்விகேட்க ஆரம்பித்து, அவர் பதிலளிக்கும் முறையால் அவரின்பால் ஈர்க்கப்பட்டவன்.
2) அறிவிழியின் வித்யாசமான எழுத்து நடை மற்றும் எழுத்துபிழை இல்லாத பதிவுகள்.
3) அரசியலை தாண்டி பலவிசயங்களில் படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
4) நாளொன்றுக்கு 1100 ஹிட்ஸ் பெற்றும் தன்னடக்கமாக இருப்பது...என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.அறிவிழி மீண்டும் பதிவிட வரவேண்டும் என்பது எனது விருப்பமும் கூட.
---------------------------------------------------
அவர் ஏன் விலகக்கூடாது என்று பின்னூட்டம் இடுங்களேன்.
நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள் - உங்களுக்கு மாற்று கருத்து இருப்பின், உங்கள் கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டுகிறேன். எனது பதிவில் கடின வார்த்தைகளுக்கு இடமில்லை. கடின வார்த்தைகளுடன் வரும் எந்த ஒரு பின்னூட்டதையும் நான் வெளியேற்றுவேன் என்பதையும் தங்களுக்கு பணிவண்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.