பல வருடங்கள் கழித்து, கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு பின், நாம் படித்தப் பள்ளியைப் பார்க்கும் போது, அதன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சில படங்கள் உங்கள் பார்வைக்காக...
பள்ளியின் நுழை வாயில்
சற்றே தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
எங்கள் குறும்புகளைப் தாயன்போடு பொறுத்துக் கொண்ட எங்க அன்பு தலைமை ஆசிரியர், எல்லோராலும் அன்போடு கே.ஜி.கே என்றழைக்கபடும், உயர் திரு. கே.ஜி. கிருஷ்ண மூர்த்தி அவர்கள். அன்னாருக்கு அகவை 84. இன்றும் அவரின் கம்பீரமான குரலும், ஞாபக சக்தியும் மிகவும் ஆச்சர்யமூட்டுவதாக அமைகின்றது. அவருக்கு, நான் அவருடைய மாணவன் என்பதை விட, அவர் என் தந்தையின் மாணவர் என்பதில் பெருமை அதிகம்.
தற்போதைய தலைமை ஆசிரியை... கடந்த வருடம் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் 97 சதவிகிதம் என அவர் வாயால் சொல்ல கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
+2 வில் கூடப் படித்த நண்பர் திரு. ராம நாதன் அவர்கள். 30 வருடம் கழித்து சந்தித்த போது, பல மணி நேரங்கள் பேசியும், பேசுவதற்கு இன்னும் பல விஷயங்கள் இருப்பது மாதிரியே தோன்றுகின்றது. சிகப்பு சட்டையில் அமர்ந்திருப்பவர் என் அண்ணன் முரளி அவர்கள்.
லேப் வகுப்புக்ள் நடைபெறும் கட்டடம்.
கணினி பயற்சி வகுப்பு.. அருமையாக இருக்கின்றது.
கலையரங்கம் - புதியதாக கட்டப் பட்டுள்ளது
தூரப் பார்வையில்... வலதுகை பக்கம் முதல் வகுப்புதான் நான் படித்த போது வகுப்பறையாக செயல் பட்டது. அப்போதெல்லாம் இவை கூரை வேயப் பட்டு இருந்தது... இப்போது அழகாக..