Tuesday, March 24, 2009

இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு

பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...

எதாவாது பதிவு போடணும்..

என்னத்தப் பத்தி பதிவு போடுவது..

கவிதை போடலாம் என்றால்...

கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..
...

இல்லாட்டி...

காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....

இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..

சரி கவிதை வேண்டாம்..

அரசியல்....

நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்... இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா.. அதுவும் வம்புதான்...

சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...

பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..

நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, இந்தியாவில் இருந்தாலும் பரவாயில்லை, நைஜிரியாவில் அப்புறம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்.. இதுவும் போயிடுச்சு..

நண்பர் பழமைபேசி மாதிரி, தமிழ், தமிழ் வார்த்தைகள் போடலாம் பார்த்தா, நம்ம பவுசு நமக்குத் தெரியும்.. வேண்டாம் விட்டு விடு...

ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..

இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..

சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா, கார்த்தல காபி குடிகிறமோ இல்லையோ, கணினியில் மெயில் செக் பண்ணலாம் அப்படின்னு வந்த், www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம், இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..

ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...

புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..

இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...

எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...

Monday, March 9, 2009

போய் விட முடிவு செய்துவிட்டேன் ...







நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.

ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.


ஒரு நாள் நான் இந்த உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.

என் வேலையை விட்டு விட்டு், சொந்த பந்தங்களை விட்டுவிட்டு, உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.

உலகத்தை விட்டு போவதற்குமுன், காட்டிற்கு சென்று கடவுளுடன் பேச நினைத்தேன்.

நான் : கடவுளே.... நான் இந்த உலகத்தை விட்டு செல்லப் போகின்றேன்..

கடவுள் : இல்லை அது மாதிரி செய்யக்கூடாது

நான் : ஏன் இந்த உலகத்தை விட்டு செல்லக்கூடாது என்று ஒரு நல்ல காரணத்தை கூறுங்களேன்.

கடவுள் : உன்னைச் சுற்றி உள்ள புற்களையும், மூங்கில்களையும் பார்.

நான் : ஆம்... மிக நன்றாக இருக்கின்றன.

கடவுள் : இந்த புற்களையும், மூங்கில்களையும் நான் விதைத்தேன்.
அவைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.
அவைகளுக்கு தேவையான காற்று, வெளிச்சம், தண்ணீர்
அனைத்தையும் அளித்தேன்.
முதல் வருடத்தில் புற்கள் மிக வேகமாக பூமியில் இருந்து
வந்தன. பூமியை பச்சை நிறத்தால் மூழ்கடித்தன.
மூங்கில் விதையில் இருந்து ஒன்றும் வரவில்லை.
அதற்காக மூங்கிலை நான் கை விட்டு விடவில்லை.
இரண்டாம் வருடத்தில் புற்கள் காடுகள் முழுவதுமாகப் மிக
அழகாகப் படர்ந்தன.
மூங்கிலில் இருந்து ஒன்றும் வரவில்லை.
அதற்காக நான் மூங்கிலை விட்டு விடவில்லை.
மூன்றாம் வருடமும் நான்காம் வருடமும் மூங்கிலில் இருந்து
ஒன்றும் வரவில்லை.
அதற்க்காக நான் அதை விட்டுவிடவில்லை.
ஐந்தாம் வருடம், மூங்கிலில் இருந்து சிறிய முளை வந்தது.
மற்ற செடிகளைப் பார்க்கும் போது, அது மிகச் சிறியதாக இருந்தது.
ஆனால் 6 மாதத்தில், மூங்கில் 100 அடிக்கு மேல் வளர்ந்தது.

மூங்கில் 5 வருடங்கள் செலவழித்தது, அதனுடைய வேர்களை பலப்படுத்ததான். அதனுடைய வேர்கள் அதனுடைய வாழ்வின் ஆதாரம். நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.
--------------------------------------------------------------------------------------------
நட்புடன் ஜமால் said...
\\நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.\\அருமையானது.
திருக்குர்ஆனில் வரும் வசனம் ஒன்று
\\எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையை பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\\
23வது அத்தியாயம் (அல் முஹ்மினூன்) 62 வது வசனம்
--------------------------------------------------------------------------------------------
நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.

உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.

உனக்கு ஒரு நேரம் வரும் கவலைப்படாதே....

நான் : எவ்வளவு உயரம் வரை நான் வளரமுடியும்? ...

கடவுள் : எவ்வளவு உயரம் வேண்டுமானும் வளரமுடியும் .. வானமே எல்லை....

நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் துக்கத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் வாழ்க்கைக்கு இரண்டுமே தேவையாக இருக்கின்றன.

ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.

சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.

ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.

Friday, March 6, 2009

புயலுக்கு முன் அமைதி ...



நண்பர் அணிமா...

மிக அழகான நண்பர்..

பின்னூட்டங்கள் போடுவதில் மிக வல்லவர், பழகுவதற்கு ஒரு நல்ல நண்பர்.

பட்டாம் பூச்சி விருது பெற்றவர்.

பேசும் போது சிரிக்க சிரிக்க பேசுபவர்.


அவர் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிற்கு உதவினார், வலைப்பூ நண்பர்களையும் உதவி கோரினார். அந்த பதிவு...

அதன் பின் பலகாலம் காணமல் போய்விட்டார்.

சில காலம் இந்தியா சென்று இருந்ததாக தகவல்கள் வந்தன.

அப்போது அவருக்கு திருமணம் என்ற வதந்தியும் பலமாக உலாவின.

இடைவெளி அவசியமா?? என்ற பதிவில் .. பிப்ரவரி 28 வரை விடுப்பு எடுத்து இருந்தார். இன்னும் திரும்பி வராததால் தான் இந்த பதிவு.


தற்போதைய நிலவரப்படி, நைஜிரியா திரும்பி வந்துவிட்டார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தம்பி அணிமா, உங்க பின்னூட்ட புயல் எப்ப ஆரம்பிக்கும்?

அணிமாவும் நானும் எடுத்துக் கொண்ட புகைப்படம். கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு, அணிமா ஸ்டைலில் ஒரு ப்ளாக் லேபிள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.




தம்பி அணிமா பற்றி, தம்பி ஜமாலின் பதிவைப் படிக்க

அணிமா இல்லை... ஹனி - மா.. படிக்க


உங்கள் அனைவரின் சார்பாகவும் அவரை திரும்ப பழையபடி, அதே உத்வேகத்தோடு திரும்பி வருமாரு அழைக்கின்றேன்.


Tuesday, March 3, 2009

அகோரியின் கையில் அலைபேசி

நண்பர் அனுப்பிய ஒரு மெயில்

உங்கள் அனைவரின் பார்வைக்காக...





கடவுள் கூட கலந்துரையாடலோ...




என்ன சொல்லுவது...




இந்தியாவை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் வாசகம்... Unity in Diversity




ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !




தற்ப்போதைய இந்தியாவின் தேசிய விளையாட்டு (Unofficial)

உங்களுடைய எண்ணங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Saturday, February 28, 2009

அறிவிழியே ... வா தம்பி வா... திரும்ப வா...


தம்பி ராஜ்குமார் (அறிவிழி) தீடிரென எழுதுவதை நிறுத்திவிட்டார்.

ஒரு அறிவிப்பு... இனிமேல் எழுதப் போவதில்லை. காரணம் கூறப்பட்ட பதிவைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

கூறப்பட்ட காரணமும் ”(தொடர்ந்து எழுத விருப்பம் இல்லாததால் விடைபெறுகிறேன்.............)” சரியில்லை. எனக்கு ஏற்புடையதாக இல்லை.

பதிவை நிறுத்தி 8 நாள் கழித்து ஏன் இந்த பதிவை இடுகின்றீர்கள் என நீங்கள் கேட்க நினைக்கலாம்.

நான் அவர் எப்படியும் திரும்பி வந்துவிடுவார் என்று நினைத்ததால், அதற்காக எந்த பதிவையும் இடாமல் இருந்தேன்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது..

நான் பார்த்தவரை, தம்பி ராஜ்குமாரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும். விசயங்களை அவர் அலசிய விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பின்னூட்டங்களுக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்த போதும், கேட்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு, சரியான பதில் அளிக்கத்தவறியதில்லை.

அவரின் பதிவு எனக்கு பிடித்து இருந்தது. உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகின்றேன்.

அவருக்கு என்று ஒரு வாசகர் வட்டம் உண்டு. அவர் கருத்தில் உடன் படாதவர்கள் கூட அவரின் பதிவைப் படிக்காமல் இருக்க மாட்டார்கள். (இல்லை என்றால் 1100 ஹிட்ஸ் ஒரு நாளைக்கு கிடைக்காது )
-----------------------------------------------------------------
நண்பர் முரு போட்ட பின்னூட்டம்
-------- ---- -------- ---------------
1) அறிவிழி எடுத்துக்கொண்ட தலைப்புகள் எல்லாம் காரசாரமான விவாத்தத்திற்க்கு உட்பட்டது. ஆனால் எல்லா நியாமான கேள்விகளுக்கும், கடைசிவரை பதிலளித்தார். நான் அவரின் கருத்துகளுக்கு ஒத்துப்போகாமல், எதிர்த்து கேள்விகேட்க ஆரம்பித்து, அவர் பதிலளிக்கும் முறையால் அவரின்பால் ஈர்க்கப்பட்டவன்.
2) அறிவிழியின் வித்யாசமான எழுத்து நடை மற்றும் எழுத்துபிழை இல்லாத பதிவுகள்.
3) அரசியலை தாண்டி பலவிசயங்களில் படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
4) நாளொன்றுக்கு 1100 ஹிட்ஸ் பெற்றும் தன்னடக்கமாக இருப்பது...என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.அறிவிழி மீண்டும் பதிவிட வரவேண்டும் என்பது எனது விருப்பமும் கூட.
---------------------------------------------------
அவர் ஏன் விலகக்கூடாது என்று பின்னூட்டம் இடுங்களேன்.

நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள் - உங்களுக்கு மாற்று கருத்து இருப்பின், உங்கள் கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டுகிறேன். எனது பதிவில் கடின வார்த்தைகளுக்கு இடமில்லை. கடின வார்த்தைகளுடன் வரும் எந்த ஒரு பின்னூட்டதையும் நான் வெளியேற்றுவேன் என்பதையும் தங்களுக்கு பணிவண்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tuesday, February 24, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!


என்னைக் கவர்ந்தவர்கள் பற்றி நண்பர் ”தமிழ்துளி” திரு. தேவா அவர்கள் தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார். அவரின் அன்பான அழைப்பை ஏற்று இந்த பதிவு.

என்னைக்கவர்ந்தவர்கள் பலர் இருப்பினும், இந்த இரு இருவரும் மிகக்கவர்ந்தவர்கள் என்பதை விட, என் உள்ளத்தில் மிக உன்னதமான இடம் இந்த இருவருக்கும் உள்ளது...




Dr. Santha


அடையாறில் (சென்னை) புற்று நோய் கழக மருத்துவ மனையை நிறுவியவர் டாக்டர் சாந்தா அவர்கள். 50 ஆண்டுகளுக்கு மேலாக புற்று நோய் சிகிச்சையில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

புற்று நோய் ஒழிப்பில் அவருடைய சேவையை பாராட்ட எனக்கு வயது இல்லை அதனால் அவரை வணங்குகின்றேன்.

பொதுச்சேவை என்றால் என்ன என்று இவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னலமில்லாத பொதுச் சேவை...

அவரின் இந்த சேவையைப் பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறந்த விருதான ரமேன் மகசேசே விருது பெற்றுள்ளார்.

அடையார் புற்று நோய் கழகத்தின் ஒரு தோற்றம்...










எம்.எஸ். சுப்புலஷ்மி...

கர்னாடக சங்கீதத்தின் ஒரு அத்தாரிட்டி

அந்த காந்தர்வ குரல்...

குறை ஒன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா... மூதறிஞ்சர் அவர்களின் பாடலுக்கு தன் தேனினும் இனிய குரலால் உயிர் கொடுத்தவர்.

இன்று கேட்டாலும் மனதில் ஒரு நிம்மதி, ஒரு இனம் புரியாத அமைதி.

அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள், மீரா பஜன்கள் இவர் பாடியதை இன்றும் மறக்க முடியுமா...

திருமதி. எம். எஸ் அவர்களும் பிலிப்பைன்சின் உயரிய விருதான ரமேன் மகசேசே பெற்றுள்ளார்.

சிலருக்கு விருது பெற்றால் அவர்களுக்கு அழகு...

ஆனால் இவர்களுக்கு விருது கொடுத்ததனால் அந்த விருதுக்கு அழகு.



இந்த தொடர் பதிவுக்கு இரண்டு நபர்களை அழைக்க வேண்டும் என்று நண்பர் அன்புக் கட்டளையிட்டுள்ளார்.

யாரவது இரண்டு பேர் மாட்ட மாட்டாங்களா என்ன...

முதல்ல ஒரு புதுப்பதிவர்... ரசனைக்காரி - 9 நாள்ள 13 பதிவு போட்டவர். (24.02.09 நைஜிரியா நேரம் 9 மணிப்படி உள்ள கணக்கு). இவரின் பள்ளிகள் அனுபவப்பாடம் .. படித்து பாருங்க ... சூப்பர்.

அடுத்து மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய நண்பர் கண்ணாடி ஜீவன் அவர்களையும் இந்த தொடர் பதிவுக்கு அழைக்கின்றேன்.

Sunday, February 22, 2009

பொது அறிவிப்பு

அன்பார்ந்த எனதருமை நண்பர்களே, தம்பிகளே, தங்கைகளே, அண்ணன்மார்களே, அக்காமார்களே.....

அலுவலக ஆணி காரணமாகவும், நெட் பிரச்சினை காரணமாகவும், உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதும், புதுப்பதிவு இடுவதும் கடினமாகி உள்ளது.

அதனால் தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கின்றேன்.

எப்போதெல்லாம் சமயம் கிடைக்கின்றதோ, நெட் வருகின்றதோ அப்போதெல்லாம் என்னுடைய பின்னூட்டம் இடப்படும்.

மருத்துவர் தேவா அவர்களே தங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நெட் சரியான பின்னர், அதை எழுதுகின்றேன்.

அனைவருக்கும் நன்றி.