Tuesday, December 15, 2009

வலைப்பதிவர்கள் சந்திப்பு - 11-12-2009



ரொம்ப நாளாச்சு. .. அபுஜாவில் பதிவர் சந்திப்பை நடத்தி...

ஒரு பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பை நடத்தி விட மனது துடித்தது. உடனே தம்பி அணிமா (இன்னமும் பதிவர்தான்.. !!), நேசமித்ரன் இருவரையும் கூப்பிட்டுச் சொன்னபோது, தம்பி நேசன் கவிதை நடையில் பதில் தெரிவித்தார். அந்த கவிதை

ஆயிரம் கதவுகளுக்கு அப்பால்
ஆதவன் ஓளியும் விழியும் சமோவா (இராகவன்)
ரோங்கா (அணிமா) தீவுகளுக்கிடையே
கடக்கும் தேதிக் கோடு என்னைக் கழித்துச்சென்றது
ஆதலால் அண்ணே ஆகாதென்றான் நேசமித்ரன்.

பொருள் : அண்ணே வேலை ரொம்ப அதிகம். அதனால் என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றேன். சந்திப்பு இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.

கடந்த மே மாதம் நடந்த மாதிரி மிகப் பெரிய, உலகம் காணத, இந்த படைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற கோஷங்களுடன் நடந்த வலைப் பதிவர் மாநாட்டை இந்த வருடமும் நடத்திவிட வேண்டும் என தம்பி அணிமா ஆசைப் பட்டதால், அதை பற்றி முடிவு செய்வதற்காக இந்த சந்திப்பு என முடிவு செய்யப் பட்டது.

பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதால், இந்த வருடம் வலைப் பதிவர் அகில உலக மாநாட்டை நடத்துவது பற்றியும், உலக வங்கியில் கடன் வாங்க இயலுமா என்பதுப் பற்றியும் விவாதிப்பதற்காக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலை 7 மணியளவில் இந்த சந்திப்பு என ஏகமனதாக ஏற்பாடுச் செய்யப் பட்டு, 7.30 மணியளவில் சந்திப்பு ஆரம்பமானது. (செயலாளர் தன்னுடைய பதிவியின் பந்தாவை காண்பித்துக் கொள்வதற்காக வந்தது லேட்... எப்போதும் போல்..)

பலவிதங்களில் பேசியும், எந்தவிதமான முடிவும் எட்டப் படாததால், தேதி அறிவிக்கப் படாமல் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டது.

அப்போது எடுத்தப் படங்கள் உங்கள் பார்வைக்காக..



வலைப் பதிவர் சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்களை வரவேற்கும் நைஜிரியா வலைப்பதிவு சங்க பொதுச் செயலாளர் இராகவன்.



எங்கள் வலைப்பதிவு சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்கள் புகைப் படத்திற்கு கொடுத்த போஸ்..



சங்க பொதுச் செயலாளருடன் உயர் திரு. மனோஜ்


சங்கத் தலைவர் மற்றும் செயலாளர்



சங்கத் தலைவருடன் வாசகர் உயர் திரு. மனோஜ்



வெல்கம் டிரிங்ஸ் ???


தம்பி நேசமித்திரனுடன் தொலைப் பேசி உரையாடல்.. சங்க விஷயங்களைப் பற்றிப் பேசப் பட்டது.


சங்கத் தலைவர் ...


மோனோ ஆக்டிங் ??? (என்னோட பதவிக்கு யாரும் போட்டி போடமுடியாது.. )


சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க


பொறுப்பி :

1. மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி. இந்தப் புகைப் பட கருவி வாங்க எங்களுடன் வந்த தம்பி குசும்பன், சாரதி செய்த அண்ணன் சுந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த மனுஷனுக்கு ஏன் கேமிரா வாங்கி கொடுத்தீங்க என அவர்கள் மேல் யாரும் கோபப் பட்டு விடாதீர்கள். விதி... வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

2. அனைத்து கிளைச் சங்களுக்கும் சங்கப் பொருளாதார நிலைப் பற்றிய நிதி நிலை அறிக்கை தனி மடலில் அனுப்பப்பட்டுள்ளது.

3. நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

4. நிதி நிலைமை சீரான பிறகு, மாநாடு நடத்தப் படும் என்பதை மிகத் தாழ்மையுடன் அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.




Saturday, December 12, 2009

அப்பா

அன்று அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது லேட்டாகிவிட்டது. அலுவலகம் இருந்தது வண்டலூரில். வீடு மடிப்பாக்கத்தில். மறுநாள் அனுப்ப வேண்டிய பர்ச்சேஸ் ஆர்டர்களையும், வந்த பில்கள் அனைத்தையும் செக் செய்து, கையெழுத்துப் போட்டு, அசிஸ்டெண்ட் பாலுவிடம் கொடுத்துவிட்டு கிளம்ப நேரம் ஆகிவிட்டது. மணியைப் பார்த்தல் 8. அய்யோ ரொம்ப நேரமாச்சே. அப்பா வேற தூங்காம காத்துகிட்டு இருப்பாரே. என்னச் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாறு. நீங்க எப்போதும் போல் 8 மணிக்கு படுத்துகுங்க அப்பா, நான் வர லேட்டாகும் அப்படின்னு சொன்னாலும், அலுவலகத்தில் இருந்து வந்து, என்னைப் பார்த்தப் பின்னாடித்தான் அவர் படுத்துக்கப் போகின்றார். 87 வயச்சாச்சு ஏன் இப்படி சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கின்றார் என புரியவில்லை என்று பலவாறக நினைத்தப் படி வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

வீடு வந்து சேர மணி 8.40 ஆகிவிட்டது. வீட்டுக்கு வந்தவுடன், ஷுவைக் கழட்டி வைத்துவிட்டு, நேராக அவரைப் போய்த்தான் பார்க்கவேண்டும். போனவுடனே மணியைப் பார்ப்பார். இந்த காலத்தில அப்படி என்னதான் வேலை செய்கின்றீர்களோ புரியவில்லை. 6 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு 7 மணிக்குள்ளாவது வீட்டுக்கு வரவேண்டாமா என்று சொல்லுவார்.

அன்று அதே மாதிரி, போனவுடனேயே, வாடா குழந்தை ரொம்ப லேட்டாயிடுச்சு இன்னிக்கு அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே, அப்பா பிபி மாத்திரை மத்யாணம் சாப்பிட்டீங்களா அப்படின்னு கேட்டதுக்கு சாப்பிட்டேன், இப்ப இந்த இரண்டு மாத்திரைத்தானே சாப்பிடணும் அப்படின்னு கேட்டார். பெயரைப் பார்த்து இதைத்தான் சாப்பிடணும் அப்படின்னு சொன்ன பிறகு, இன்னிக்கு சப்பாத்தி ஏ கிளாஸ். பர்ஸ்ட் கிளாஸ் டால். நானே நாலுச் சாப்பிட்டேன்னா பார்த்துக்கோ. போ.. போ.. மூஞ்சி கை,கால் அலம்பிட்டு சாப்பிடுன்னு வாஞ்சையாச் சொன்னார்.

மூஞ்சி கை, கால் அலம்பிட்டு வந்து மாத்திரைச் சாப்பிட்டீங்களா கேட்ட போது, நான் சாப்பிட்டாச்சு, போய் முதல்ல சாப்பிடு. மத்யானம் சாப்பிட்டது. நேரத்தோடு சாப்பிட பழகிக்கோ அப்படின்னு சொன்னார்.

எப்போதும் போல் ஈசிச்சேரில் உட்கார்ந்து, முன்னாடி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டுகிட்டு, சாப்பிட உட்கார்ந்தா, அப்பா ரூமில் இருந்து டமால்ன்னு ஸ்டூல் விழறச் சத்தம் கேட்டுச்சு. இத்தனைக்கும் அவர் ரூம் முன்னாடித்தான் உட்கார்ந்து இருக்கேன்.

என்னடான்னு பார்த்தா, கட்டிலில் உட்கார்ந்திருவர் அப்படியே ஜன்னலில் சாய்ஞ்சுகிட்டு இருக்கார், கண்கள் மேலே சொருகியிருக்கு. தன்க்கு முன்ண்ட்டை வச்சு இருந்த ஸ்டூலையும், வென்னீர் பாத்திரத்தையும் தட்டி விட்டு இருக்கார். புரை ஏறும் போது இப்படி ஆகும் என நினைச்சுகிட்டு,( முன்னாடி சில சமயம் அது மாதிரி ஆகியிருக்கு) தூக்கி முதுகுல தட்டி கொடுத்தா ... களக் என்று ஒரு சத்தம்... என் மேல் சாய்ந்தார்.. தலை சாய்ந்துவிட்டது... வாயில் இருந்து எச்சில் ஒழுகுகின்றது ...கூப்பிட்டா பதில் இல்லை....

சரி உடனே நங்கநல்லூர் ஹிந்து மிஷின் ஆசுபத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்குள், விரல்களைத் தொட்டால் ஜில் என்று ஆகிவிட்டது...

அப்பா ... போயிட்டார் .. நன்றாகத் தெரிந்துவிட்டது.. இருந்தும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துப் போய், காண்பித்த போது, அவர் நம்மை விட்டு போய்விட்டார் என மருத்துவர் தெரிவித்தார்.

இன்று அவருக்கு 4 வது திவசம்.... ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதை நினைக்க மனசு வேதனை..

அப்பா எவ்வளவு கத்துக் கொடுத்து இருப்பாய். பாடம் சந்தேகம் கேட்டால் நீயாக பதில் சொல்வதைவிட, நானே கத்துகிறமாதிரி அதை செய்வாயே...

சிக்கனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் வேறுபாடு சொல்லிக் கொடுத்தாயே...

இரண்டு வேஷ்டிகளுக்கு மேல் மூன்றாவது வேஷ்டி இருந்தால் அது லக்சரி என்று சொல்வது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் அதே மாதிரி வாழ்ந்து காட்டீனாயே...

உன்னை நினைத்து தூக்கம் போய்விட்டது..

கொஞ்சம் தூங்கட்டும்மா..

கடைசி வரை உன் மரியாதையை எவ்வளவு நல்லா காப்பாத்தி கொண்டு போனாய். யாருக்கும் பாரமா இருக்க கூடாது, சட்டென போயிடணும் அப்படின்னு சொன்னது மட்டுமல்லாமல், அப்படியே செய்து காட்டினாய்.

இன்றும் என்னால் மறக்க முடியாது, உன்னை பெசண்ட் நகர் எடுத்துச் செல்லும் போது வழியில் இருந்த அத்தனை டிராபிக் போலிஸூம் தொப்பியைக் கழட்டிவிட்டு சல்யூட் அடித்ததை..


பொறுப்பி :

என் அப்பாவை நினைத்து இன்று இரவு உறக்கமே வரவில்லை. அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக இந்த இடுகை.

Sunday, December 6, 2009

படங்கள் - எங்கள் வீட்டுத் தோட்டம்

எங்க வீட்டுத் தேட்டத்தை படம் எடுத்துப் போட்டு இருகேன்.

புகைப் படக் கருவி வாங்கிக் கொடுத்த வடலூரான் கலையரசனுக்கு இந்த படங்கள் சமர்ப்பணம்.



கலர் கலரா குருவியைப் பார்த்தவுடன் கிளிகிட்டேன். தோட்டம் போட ஆரம்பித்தப் போது நிறைய பறவைகள் வந்தன. இப்போதெல்லாம் வருவதேயில்லை. ஏன் என்றுத் தெரியவில்லை.


இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ள செம்பருத்திச் செடி.


வீட்டு வரவேற்பறையில் இருந்து எடுத்தப் படம்


வேர்கடலை செடி. இந்த படம் வருங்கால சந்ததியனருக்காக. தமிழ் நாடு முழுவதும் வருங்காலத்தில் கான்கிரீட் காடுகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


வளர்ந்துவரும் முளைக்கீரை..



பூ பெயர்த் தெரியவில்லை... அழகா இருந்ததா வீட்டில் வச்சு வளர்க்கின்றேன். பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்



புதினா - ஒரு சிறிய குச்சிதான் நட்டு வச்சேன். மூன்று மாத்த்தில் இப்படி வளர்ந்திருக்கு.


பாகல் பூ


முதல் பாகல் பிஞ்சு


தோட்டம் வெளியில் இருந்து


சாமந்திபூ



வெண்டை பூ பூப்பதற்கு முன்


வெண்டைப் பூ


வெண்டைக்காய் - எங்கள் தோட்டத்தில் காய்த்த முதல் காய்



எங்க தோட்டத்தில் பூத்த ரோஜா


இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்ப அழகா இருக்கும்


இதுமாதிரி படங்கள் போடுவதற்கு உந்து சக்தியாக இருந்தது நண்பர் ஞானசேகரன் அவர்களின் கண்டதும் சுட்டதும் வலைப்பூ. அதற்காக அவருக்கு நன்றிகள் பல.

பொறுப்பி :

1. இந்த படங்களில் லைட்டிங் சரியில்லை, அது சரியில்லை என்று யாராவது திட்ட வேண்டுமானால் என்னை மட்டும் திட்டவும். புகைப்பட கருவி வாங்கிக் கொடுத்த கலையரசன் இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்க்க மாட்டார்.

2. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி, நானும் நண்பர் ஞானசேகரனைப் பார்த்து படம் போட்டு இருக்கேன். தயவு செய்து யாரும் அவரையும் என்னையும் எந்த விதத்திலும் கம்பேர் செஞ்சுடாதீங்க. அவர் மலை நான் மடு.

3. இந்த படங்களுக்கு கவிதை எழுத ஆசை. போன தடவை கவிதை எழுதி கிடைத்த தனிப்பட்ட மிரட்டல்களால் கவிதை எழுதவில்லை. என் கவிதையை ரசித்த நண்பர்கள் மன்னிக்க. இந்த மிரட்டல் பயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்துவிடுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

Saturday, November 21, 2009

ஜஸ்ட் இக்னோர் இட்...



அது ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி. அங்கு அவன்... (எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுவோம்..) ஒரு பர்ச்சேஸ் மேனேஜர். அவனுக்கு 15 வருடம் பல கம்பெனிகளில் வேலைப் பார்த்த அனுபவம் இருந்தாலும், பர்ச்சேஸ் என்பது அவனுக்குப் புதியது.

அந்த கம்பெனியில், அவனுக்கு உதவியாக, 6 பேர் இருந்தனர். அதில் 4 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள்.

அந்த கம்பெனியின் முதலாளிக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு எல்லோரும் சேர்ந்து ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் சேர்ந்து காசுப் போட்டு, பரிசு வாங்க தீர்மானித்தனர்.

என்ன வாங்குவது என்று முடிவு செய்வதற்குள், எல்லோருக்கும் தாவு தீர்ந்துப் போச்சு.

சரி எக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து ஒருத்தர், வேறு சில டிபார்ட்மெண்டில் இருந்து சிலர் என நான்கு பேர் பரிசுப் பொருள் வாங்கச் செல்லலாம் என முடிவு செய்தனர்.

அவன் (அதாவது எக்ஸ்), வேலை கூடுதலாக இருந்ததால், தன்னுடைய உதவியாளர் ஒருவரை அவர்கள் கூட அனுப்பினான்.

அந்த உதவியாளர், கொஞ்சம் அல்டாப் பேர்வழி. இருந்தாலும் பரவாயில்லை என்று அவன் அவரை பரிசுப் பொருள் வாங்க அனுப்பினான். அவர்களும் ஒரு நான்கு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்து பரிசு பொருளை வாங்கி வந்தனர். வரும் போது, பரிசு கொடுப்பதற்கு ஏதுவாக பேக் செய்து, பொருள் என்னவென்று தெரியாத மாதிரி கொண்டு வந்தனர்.

கூட வேலைச் செய்த மற்றவர்களுக்கு என்ன பரிசுப் பொருள் என அறிய ஆவல். அதனால் அவர்கள் பரிசுப் பொருள் வாங்கப் போனவரை என்ன பரிசுப் பொருள் என்று கேட்கத் தொடங்கினர். அவரும், பிரமாதமான பரிசுப் பொருள், சூப்பரா இருக்கு, ரூ x,xxx/- ஆச்சு, என்றெல்லாம் சொல்லுகின்றாரேத் தவிர, என்ன பரிசுப் பொருள் என்றுச் சொல்லவேயில்லை. ஒருவர் வாய் திறந்தே கேட்டு விட்டார். அதற்கு அவர், பரிசுக் கொடுக்கும் போது முதளாலி திறந்து காண்பிப்பார் அப்ப பார்த்துக்கோங்க, அது சஸ்பென்ஸ் என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

எக்ஸ் அப்போது கூட, அவரிடம் என்ன பரிசுப் பொருள் என்றுக் கேட்கவில்லை. அந்த உதவியாளரும் எக்ஸ் எதாவது கேட்பேரா என்று எதிர்ப் பார்த்தார். நேரம் கடந்தது. அதைப் பற்றி எக்ஸ் கவலைப் படவேயில்லை. அவர் தன் வேலையில் கண்ணும், கருத்துமாகவே இருந்தார்.

அந்த உதவியாளர், கொஞ்ச நேரம் கழித்து எக்ஸிடம் வந்தார்...

அவர் : சார் என்ன பரிசுப் பொருள் என்று நீங்கள் கேட்கவேயில்லையே ?

எக்ஸ் : என்ன அவசரம், நாளைக்கு கொடுக்கும் போது தெரிந்துவிடப் போகின்றது.

அவர் : எல்லோரும் கேட்டாங்க, ஆனால் நீங்க கேட்கவில்லையே?

எக்ஸ் : அதுதான் நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றதே? தெரியவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடப் போகின்றாதா என்ன?

அவர் : இல்ல சார் டிபார்ட்மெண்ட் சீஃப் நீங்க ஒன்னுமே கேட்கவேயில்லையே?

எக்ஸ் : ஆமாம் டிபார்ட்மெண்ட் சீஃப் நான் தான். இல்லை என்றுச் சொல்லவேயில்லையே? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.

அவர் : என்ன சார் நீங்க என்ன பரிசுப் பொருள் என்று கேட்கவே மாட்டேன் என்கின்றீர்களே?

எக்ஸ் : அதான் சொன்னேனே, நாளைக்கு தெரிந்துவிடப் போகின்றது. இப்ப என்ன அவசரம்.

அவர் : அது வந்து சார், சந்தன மரத்தில் செதுக்கிய அழகான சிற்பம் சார்.

எக்ஸ் : அப்படியா .. ரொம்ப சந்தோஷம்..

உதவியாளருக்கு முகம் தொங்கிப் போயிட்டது. என்னாடா இந்த மனுஷன் இப்படி இருக்கின்றாரே என்று. அந்த உதவியாளர் வேறு விஷயமாக வெளியே போன போது, மற்றொரு உதவியாளர் எக்ஸிடம் வந்து, சார், நாங்க எல்லாரும் கேட்ட போது, பதில் சொல்லாமல் எதோ எதோ சொன்னார்கள். நீங்க எப்படி சார் அவங்களையே சொல்ல வச்சீங்க அப்படின்னாங்க..

எக்ஸ் பதில் சொன்னார் - ஜஸ்ட் இக்னோர் இட்...

எக்ஸ் அடிக்கடி சொல்லுவது இது .. ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லையா... ஜஸ்ட் இக்னோர் இட்...

எனக்கும் இந்த வார்த்தைப் பிடிச்சு இருக்கு... ஜஸ் இக்னோர் இட்..

பொறுப்பி :
1. பாதி உண்மை, மீதி புனைவு

2. வித்யாசமா நிறைய படிச்சு,
நானும் வித்யாசமா எழுதுவதாக நினைத்து,
வித்யாசமா எழுதியிருக்கேன்.

நீங்களும் வித்யாசமா நினைச்சுக்காம
வித்யாசமா இருந்தா வித்யாசமா இருக்குன்னும்,
வித்யாசமா இல்லை என்றால் விதயாசமா இல்லை என்றும்,
பின்னூட்டம் போடலாம்,

இல்லாட்டி நீங்களும் வித்யாசமா நினைச்சு
வித்யாசமா பின்னூட்டம் போடலாம்.
அத நானும் வித்யாசமா நினைச்சுக்க மாட்டேன்.

3. பொறுப்பி 2 கவிதை என்பதை இங்கு கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

4. கவிதை எழுத எனக்கு ரோல் மாடல் - அன்பு அண்ணன் தண்டோரா.

Tuesday, November 17, 2009

பத்துக்குப் பத்து.. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்



பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒரு சங்கிலித் தொடர் இடுகை, வலைப் பதிவுகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது.தொடங்கியவர் திரு. மாதவராஜ் அவர்கள். இந்த சங்கிலித் தொடர் இடுகையைத் தொடர என்னை அழைத்து இருப்பவர் அன்புத் தம்பி “ஷஃபி” உங்களில் ஒருவன்.

இந்த பிடித்தது, பிடிக்காததுப் பற்றி கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொல்லிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இன்று எது பிடிக்கின்றதோ அது நாளை பிடிக்காததாக மாறி விடுகின்றது. பிடிக்காதது பிடித்ததாக மாறி விடுகின்றது. மாறுதல் என்ற வார்த்தை ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் மாற்றத்துகுரியது.

இன்று நான் பிடித்தது, பிடிக்காதது, பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று போடப்படுவது அனைத்தும் இன்றைய மன நிலையில் போடப்படுகின்றது.

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பற்றிப் போடப் படும் போது, சிலருடைய மனதை காயப் படுத்தப் படலாம் என்ற ஐயம் எனக்குள் எழாமல் இல்லை. இருந்தாலும், அன்புத் தம்பி அவர்களின் அழைப்பை ஏற்று நான், இந்த இடுகையைத் தொடருகின்றேன்.


இந்த இடுகையைப் போடும் போது பின் வரும் விதி முறைகளையும் ஏற்படுத்தி வைத்து இருக்கின்றனர். அவை

  1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்..
  2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
  3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்

குறிப்புகள் :

  1. பிடித்தவர், பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்பதை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்
  2. கேள்விகள் பத்தைத் தாண்ட வேண்டாம்


இதோ எனது பத்துக்கு பத்து:

1. அரசிய‌ல் தலைவர்கள்

பிடித்த‌வ‌ர்க‌ள் : யாருமே இல்லை

பிடிக்காதவர்கள் : இன்று இருக்கும் அனைத்து தலைவர்களும்.

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இரண்டிற்கும் காரணம் ஒன்னுதான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு. இது புரியாமல், பொது பிரச்சனைகளுக்கு, மக்களின் வாழ்வாதார துன்பங்களுக்கு எந்த விதமான ஒட்டுதலும், உறவும் இல்லாமல், மனம் போனபடி பேசுவதால் - ஒருவரையுமே பிடிக்கவில்லை.

2. எழுத்தாளர்கள் :

பிடித்தவர்கள்: எல்லோரும்... (எழுதுவது என்பது என்ன கஷ்டம் என்று இப்போது எனக்கு புரிவதால்)

பிடிக்காதவர்கள் : யாருமே இல்லீங்க.. (சில சமயம் எழுதப்பட்ட கதைகளோ அல்லது அதன் கருவோ பிடிக்காமல் போகலாம் - அதனால் அது அவர்களைப் பிடிக்காது என்று சொல்லமுடியாது)


3. திரைப்பட பாடலாசிரியர்கள் :

பிடித்தவர்கள் : வைரமுத்து (இவரின் கற்பனை வளம் எனக்கு பிடித்தது), கவிஞர் வாலி... (என்னைக் கட்டிப் போடும் வரிகள்)

பிடிக்காதவர்கள் : குத்துப் பாட்டு எழுதும் அனைவரும் (வாலி, வைரமுத்து குத்து பாட்டு எழுதும் போதும் எரிச்சலாகத்தான் வ்ரும்...)

4. நகைச்சுவை நடிகர் :

பிடித்தவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசாமல், குட் காமெடியுடன் (குட் காமெடி, பேட் காமெடிக்கு ஐயா லதானந்த அவர்களின் இந்த இடுகையைப் பார்க்கவும்) நடிக்கும் போது அனைவரும்

பிடிக்காதவர்கள் : இரட்டை அர்த்த வசனம் பேசி நடிக்கும் அனைவரும். இந்த மாதிரி காட்சிகளைப் பார்க்கும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எரிகின்றது.

5. நடிகர் :

பிடித்தவர்கள் : சரியாக நடிக்கும் போது - யாராக இருந்தாலும்..

பிடிக்காதவர்கள் : நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விரலை ஆட்டியும், தலை முடியை சிலிப்பிகிட்டு நடிப்பு என்று கந்தர்வ கோலம் செய்யும் போதும்...

6. நடிகை :

பிடித்தவர்கள் : நடிக்கத் தெரிந்த நடிகைகள் இப்போது இல்லை - அதனால் ஒருவரும் இல்லை.

பிடிக்காதவர்கள் : இன்று திரைத் துறையில் இருப்பவர் அனைவரும்

7.தொழில் அதிபர்க‌ள் :

பிடித்தவர்கள் : வேணு சீனிவாசன்... சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர். அங்கு வேலை பார்த்ததால் அவரைப் பற்றி நன்கு தெரியும்.

பிடிக்காதவர்கள் : தொழிலாளிகளை கொத்தடிமை போல் நடத்தும் அனைத்து முதலாளிகளும்


8. இயக்குனர் :

பிடித்தவர்கள் : இதில் குறிப்பிட்டு இவர்தான் என்று சொல்லத் தெரியவில்லை. படம் பிடிக்கும் போது, அவரைப் பிடிக்கின்றது.. உதாரணம் - பாரதிராஜா - முதல் மரியாதை படத்துக்காக அவரை ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காதவர்கள் : ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.


9. பதிவுலகம் :

பிடித்தது : மற்றவர் மனங்களை புண் படுத்தாத அனைத்து பதிவர்களையும் ரொம்ப பிடிக்கும்.

பிடிக்காதது : தனி மனித தாக்குதல்கள் நிறைந்த இடுகைகளை சுத்தமாகப் பிடிப்பதில்லை. இங்கும் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் பிடிக்காது என்று கிடையாது. தாக்குதல் நிறைந்த இடுகை மட்டும் என்றுமே பிடிப்பதில்லை.


10. திரைப்படங்கள் :

பிடித்தது : காம நெடி இல்லாத ... காமெடி மட்டும் நிறைந்த படங்கள். உதாரணம் - தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி

பிடிக்காதது : எந்த விதமான லாஜிக் இல்லாமல், ஹீரோவையும், கதா நாயகியின் சதையையும் நம்பி, பிராதனப் படுத்தி எடுக்கப்படும் படங்கள்.


இந்த தொடர் இடுகையை தொடர யாரையும் நான் அழைக்கவில்லை.

காரணம் - கிட்ட தட்ட எல்லாரும் எழுதியாச்சு...

அப்படி யாராவது இஷ்டப்பட்டால், பின்னூட்டத்திலோ, என்னோட ஜிமெயில் ஐடியிலோ (raghavannigeria@gmail.com) தெரியப் படுத்தினால், அழைக்க மிக்க ஆவலாக இருக்கின்றேன்.

Monday, November 16, 2009

என்ன தலைப்பு வைக்க..






வேளாச்சேரியில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் உள் சாலை.. ஆரம்பமே... குப்பை கூளத்துட்டம் ஆரம்பிகின்றது.



மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரிக்கரை ஓரமாக கொட்டப் பட்டு இருக்கும் குப்பைகள் - இது ஒரு சாம்பிள் தான்.. ஏரிக்கரை ஓரமாக சென்றீர்கள் என்றால் இது மாதிரித்தான் இருக்கும். அழகான ஏரி... இதன் அருமை தெரியாமல் இப்படி வீணடிக்கின்றார்களே என்ற வருத்தம்தான்.




சென்னையில் அண்ணா சாலையில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த படம் எதற்காக என்றுதானே கேட்கின்றீர்கள்.

செக்யூரிட்டி அறை அந்த கட்டடத்தை விட்டு வெளியே, மக்கள் நடக்கும் நடை பாதையின் மேல் அமைந்துள்ளது.

இந்த கட்டடம் நந்தனம் சிக்னலுக்கும், எஸ்.ஐ.இ.டி. சிக்கனலுக்கும் இடையில் கருமுத்து மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது.

கட்டடம் கட்டும் போதே இதை அரசு அதிகாரிகள் கவனிக்க மாட்டார்களா.. இத்தனைக்கும் இது மிக முக்கியமான, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் செல்லும் வழியில் இருக்கின்றது.

இதே போல், எத்தனைப் பேர் கவனித்து இருப்பீர்கள் எனத் தெரியாது... சென்னை VGP யின் வாயில், நடை பாதையின் மேல்தான் அமைந்து இருக்கு. எத்தனையோ ஆட்சிகள் வந்துப் போயிருக்கு, நானும் பல வருடங்களாக கவனித்து இருக்கின்றேன், இது வரை யாருமே, எந்த ஆட்சியாளருமே இதை பற்றி கேள்வி கேட்டதில்லை..

ஆண்டவருக்கே வெளிச்சம்.

Saturday, November 14, 2009

அகர வரிசை சங்கிலித் தொடர் இடுகை...


உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. சரி நமக்கும் இடுகை எழுத விஷயம் ஒன்னும் கிடையாதா, இதுதாண்டா சாக்கு அப்படின்னு, இந்த சங்கிலித் தொடர் இடுகையை கெட்டியா பிடிச்சுகிற வேண்டியதா இருக்குங்க.

சும்மா (நம்புங்க வலைப்பூ பெயர்ங்க..) அப்படின்னு சொல்லிகிட்டு, பொளந்து கட்டிகிட்டு இருக்கும் கவிதாயினி, தேனம்மை லஷ்மணன் அவர்கள், சுமார் 15 நாட்களுக்கு முன் இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்து இருந்தார்கள். இன்னிக்கு எழுதலாம், நாளைக்கு எழுதலாம் என்று நாட்களை கடத்தியாச்சுங்க. சோம்பேறித்தனம் என்று இல்லை... வேலை பளு கூடுதல்தாங்க காரணம். ஒரு வழியா இன்னிக்கு முடிவு பண்ணி இந்த தொடர் இடுகையை தொடர்கின்றேன்.

ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் சொல்லிக்க ஆசைப் படுகின்றேன்... இந்த தொடர் இடுகைக்கு நான் யாரையும் அழைக்கப் போவதில்லை... காரணம் என்ன என்கின்றீர்களா.. எனக்குத் தெரிந்த எல்லோரும் எழுதிட்டாங்க... சிலர் கூப்பிட்டாலும் எழுத மாட்டாங்க. அதனால், மீ த லாஸ்ட்...

1. A - Available / Single - தனிமரம் தோப்பாகுதுங்க...

2. B - Best friend - வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.. நிச்சயமா ராஜபக்‌ஷே இல்ல

3. C- Cake or pie - பசிக்கும் போது எது கொடுத்தாலும் சாப்பிடுவோமுங்க..

4. D - Drink of choice - கும்பகோணம் பசும் பால் டிகிரி காப்பி

5.E - Essential items you use everyday - மூளை அப்படின்னு சொல்லுணும் ஆசை.. ஆனால் இருப்பவங்கதான் அதைச் சொல்ல முடியும் அப்படிங்கிறதால, எதையெல்லாம் தினமும் உபயோகப் படுத்துகின்றேனோ, அது எல்லாம்.

6. F - Favorite color - கண்ணுக்கு இனிமையான கலர்கள் அனைத்தும்...

7. G - Gummy bears or worms - இது சத்தியமா என்ன என்று புரியலை.. அதனால் Pass..

8. H - Hometown - எந்த ஊரைச் சொல்ல... படிச்சது கும்பகோணம்.

9. I - Indulgence - இது வேறாயா... அப்படி ஒன்னும் கிடையாது

10. J - January/Feruary - இரண்டுமே... தங்கமணி பிறந்த நாள் ஜனவரி.. என்னோடது பிப்ரவரி அதனாலத்தான்

11. K - Kids and their names - இளவரசு ஒருவர் மட்டும் தாங்க - அரவிந்த்

12. L - Life is incomplete with out - அன்பு

13. M - Marriage date - நவம்பர்.... (தேதி வேண்டாமே.....)

14. N - Numberof siblings - 2 அன்பான அக்காக்களும் 2 அன்பான அண்ணன்களும்

15. O - Oranges or Apples - எது கொடுத்தாலும் எனக்கு ஓகே

16. P - Phobias/ Fears - பயம் அப்படிங்கிறத பார்த்து பயம்

17. Q - Quotes for today - இரண்டு சொல்ல ஆசைப் படுகின்றேன்

ARISE, AWAKE AND STOP NOT, TILL THE GOAL IS REACHED - ஸ்வாமி விவேகானந்தர்.

BETTER TO LIGHT A CANDLE THAN TO CURSE THE DARKNESS (இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது - ரொம்ப பிடித்தது)

18. R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சியே அப்படித்தான்

19. S - Season - Four season

20. T- TAG 4 PEOPLE - யாருமில்லை (உண்மை என்ன என்றால் யாரும் கிடைக்கவில்லை...)

21. U- Unknown fact about me - யாருக்குத் தெரியும்

22. V - vegetables you dont like - சைவச் சாப்பாடுன்னு ஒன்னு கிடைச்சா போதும் அப்படின்னு இருக்கோம் .. இதுல பிடிச்சது, பிடிக்காது என்று எல்லாம் சொல்லமுடியுமா என்ன..

23. W - Worst habbit - கோபம் ... முன் கோபம்..

24. X - Xrays you had - அது நிறைய இருக்குங்க... வருஷா வருஷம் எடுப்பது என்றில்லாமல், அவ்வப்போது முதுகு, மார்பு, கழுத்து என்று நிறைய இருக்கு..

25. Y - Your Favourite Food - சைவ உணவு வகைகள்

26. Z - Zodiac Sign - மகரம் / Acquarian


அன்பிற்கு உரியவர்கள் - நான் அன்பு செலுத்துபவர்கள், என் மீது அன்பு செலுத்துபவர்கள் அனைவரும்

ஆசைக்குரியவர் - அன்பு மனைவியும், ஆசை மகனும்

இலவசமாய்க்கிடைப்பது - உபதேசம், ப்ளாக் ஸ்பாட், தமிழ் மணம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்

ஈதலில் சிறந்தது - பசித்தவருக்கு உணவும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

உலகத்தில் பயப்படுவது - கூட இருந்தே குழி பறிக்கும் ஆசாமிகள்

ஊமை கண்ட கனவு - அது அவரைத்தாங்க கேட்கணும்

எப்போதும் உடன் இருப்பது - உயிர் (இப்போதைக்கு...) பின்னர் - நாம் செய்த நல்ல காரியங்கள், தான தர்மங்கள்

ஏன் இந்தப் பதிவு - கூப்பிட்டு இருக்காங்க - ஏமாத்தக்கூடாது என்ற நல்ல எண்ணம் தாங்க

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - நல்ல விஷயங்கள்.. பெரியோர்களின் வாழ்த்துகள்

ஒரு ரகசியம் - ரகசியம் .. பரம ரகசியம்.. இரண்டாவது ஆளுக்கு தெரிஞ்சா அது ரகசியமே இல்லை

ஓசையில் பிடித்தது - குழந்தைகளின் மழலை, விடியலில் கேட்கும் பறவைகளின் இனிய ஆரவாரங்கள்..

ஒளவை மொழி ஒன்று - ஆறுவது சினம்..


பொறுப்பி :-

இந்த இடுகை என்னோட 50 வது இடுகை. அப்படி, இப்படி என்று நானும் ஐம்பது இடுகைகள் போட்டாச்சு. உங்கள் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் 50 வரை போட்டாச்சு...

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...